பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு வெளியூர் வாழைத்தார் வரத்து இல்லாததால் கூடுதல் விலைக்கு ஏலம் போனதாக வியாபாரிகள் தகவல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், ஒரு பகுதியில் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் சுற்றுவட்டார கிராம பகுதி மற்றும் தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வாழைத்தார்கள் கொண்டு வரப்படுகின்றன.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், ஒரு பகுதியில் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் சுற்றுவட்டார கிராம பகுதி மற்றும் தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வாழைத்தார்கள் கொண்டு வரப்படுகின்றன. 



அதை உள்ளூர் வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் நேரில் வந்து குறிப்பிட்ட விலை நிர்ணயித்து வாங்கி செல்வது வழக்கம். இந்த வருடம், தென்மேற்கு பருவமழையின் போது வாழை அறுவடை பணி பாதிக்கப்பட்டதால், அவ்வப்போது மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து குறைவாக இருந்துள்ளது. 

இந்த மாதத்தில் மழை இல்லாததால், கடந்த இரண்டு வாரமாக வாழை அறுவடை அதிகமானது. இருப்பினும், நேற்று நடந்த சந்தை நாளின் போது வெளியூர் வரத்து இல்லாமல், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வாழைத்தார் வரத்து இருந்துள்ளது. 

வெளியூர் வரத்து இல்லாததால் அனைத்து ரக வாழை தார்களும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக செவ்வாழை தார் ரூ.1,350 வரை ஏலம் போனது. மோரிஸ் அதிகபட்சமாக ரூ.600 க்கும், பூவன் தார் ரூ.6,500 வரையிலும் கற்பூரவள்ளி ரூ.600 க்கும், ரஸ்தாளி ரூ.600 வரையிலும் என கூடுதல் விலைக்கு ஏலம் போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு நேற்று வெளியூர் வாழைத்தார் வரத்து இல்லாததால் கூடுதல் விலைக்கு, ஏலம் போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், ஒரு பகுதியில் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் சுற்றுவட்டார கிராம பகுதி மற்றும் தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வாழைத்தார்கள் கொண்டு வரப்படுகின்றன. அதை, உள்ளூர் வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் நேரில் வந்து குறிப்பிட்ட விலை நிர்ணயித்து வாங்கி செல்வது வழக்கம். 

இந்த நிலையில், தென்மேற்கு பருவமழையின் போது வாழை அறுவடை பணி பாதிக்கப்பட்டதால், அவ்வப்போது மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து குறைவாகவே இருந்துள்ளது. மேலும், இந்த மாதத்தில் மழை இல்லாததால், கடந்த இரண்டு வாரமாக வாழை அறுவடை அதிகமானது, என விவசாயிகள் தெரிவித்தனர். 

இருப்பினும், நேற்று நடந்த சந்தை நாளின் போது, வெளியூர் வரத்து இல்லாமல், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வாழைத்தார் வரத்து இருந்துள்ளது. வெளியூர் வரத்து இல்லாததால், அனைத்து ரக வாழைதார்களும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது, என்றனர். 

இதில், அதிகபட்சமாக செவ்வாழை தார் ரூ.1,350 வரை ஏலம் போனது. மோரிஸ், அதிகபட்சமாக ரூ.600 க்கும், பூவன் தார் ரூ.6,500 வரையிலும் கற்பூரவள்ளி ரூ.600 க்கும், ரஸ்தாளி ரூ.600 வரையிலும் என கூடுதல் விலைக்கு ஏலம் போனதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...