பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் தானியங்கி கேமராக்கள் மூலம் புலிகள் கணக்கெடுப்பு பணிக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் தானியங்கி கேமராக்கள் மூலம் புலிகள் கணக்கெடுப்பு பணிக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது ஆனைமலை புலிகள் காப்பகம். இந்த புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனக் கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி உலாந்தி ஆகிய நான்கு வன சரகங்கள் உள்ளன.

இங்கு ஆண்டுதோறும் கோடை காலம் மற்றும் குளிர் காலங்களில், வன விலங்கு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய புலிகள் ஆணையம் சார்பில் ஆண்டுக்கு ஒரு முறை தானியங்கி கேமராக்கள் மூலம் , புலிகள் கணக்கெடுப்பு (Phase - lV Monitoring) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான Phase - lV, Monitoring எனப்படும் தானியங்கி கேமரா கணக்கெடுப்பு பணிகள் நடத்த தேசிய புலிகள் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி, பொள்ளாச்சி - வால்பாறை ரோடு அட்டகட்டி வனத்துறை பயிற்சி முகாமில், நேற்று வனத்துறை ஊழியர்களுக்கு, தானியங்கி கேமராக்கள் பொருத்தும் முறை மற்றும் கணக்கெடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
நாளை காலை முதல் தானியங்கி கேமராக்களை வனப்பகுதிக்குள், 2 சதுர கிலோ மீட்டருக்கு ஒரு கிரிட்லயன் (gridline) என 245 கிரிட்லயன்கள் பிரிக்கப்பட்டு, நான்கு வனசரகங்களில், சுமார் 600 தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி நடக்க உள்ளது. தொடர்ந்து 25 நாட்கள் நடக்கும் இந்த கணக்கெடுப்பு பணியில், புலிகளின் நடமாட்டம், எண்ணிக்கை உள்ளிட்டவை புகைப்படங்கள் மூலம் துல்லியமாக கணக்கிடப்படும் என்று, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயிற்சி முகாமில் ஆனைமலை புலிகள் காப்பக, பொள்ளாச்சி வனகோட்ட துணை இயக்குனர், ஆரோக்கியராஜ் சேவியர் கலந்துகொண்டு வனத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தார். மேலும் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வனச்சரகர்கள் உள்ளிட்ட வனத்துறை ஊழியர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது ஆனைமலை புலிகள் காப்பகம். இந்த புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனக் கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி உலாந்தி ஆகிய நான்கு வன சரகங்கள் உள்ளன.

இங்கு ஆண்டுதோறும் கோடை காலம் மற்றும் குளிர் காலங்களில், வன விலங்கு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய புலிகள் ஆணையம் சார்பில் ஆண்டுக்கு ஒரு முறை தானியங்கி கேமராக்கள் மூலம் , புலிகள் கணக்கெடுப்பு (Phase - lV Monitoring) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான Phase - lV, Monitoring எனப்படும் தானியங்கி கேமரா கணக்கெடுப்பு பணிகள் நடத்த தேசிய புலிகள் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி, பொள்ளாச்சி - வால்பாறை ரோடு அட்டகட்டி வனத்துறை பயிற்சி முகாமில், நேற்று வனத்துறை ஊழியர்களுக்கு, தானியங்கி கேமராக்கள் பொருத்தும் முறை மற்றும் கணக்கெடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
நாளை காலை முதல் தானியங்கி கேமராக்களை வனப்பகுதிக்குள், 2 சதுர கிலோ மீட்டருக்கு ஒரு கிரிட்லயன் (gridline) என 245 கிரிட்லயன்கள் பிரிக்கப்பட்டு, நான்கு வனசரகங்களில், சுமார் 600 தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி நடக்க உள்ளது. தொடர்ந்து 25 நாட்கள் நடக்கும் இந்த கணக்கெடுப்பு பணியில், புலிகளின் நடமாட்டம், எண்ணிக்கை உள்ளிட்டவை புகைப்படங்கள் மூலம் துல்லியமாக கணக்கிடப்படும் என்று, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயிற்சி முகாமில் ஆனைமலை புலிகள் காப்பக, பொள்ளாச்சி வனகோட்ட துணை இயக்குனர், ஆரோக்கியராஜ் சேவியர் கலந்துகொண்டு வனத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தார். மேலும் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வனச்சரகர்கள் உள்ளிட்ட வனத்துறை ஊழியர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.