கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்த சம்பவத்தில், சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆர்.எஸ்.புரம் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக (TNAU) விடுதியில் உயிரிழந்த பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு மாணவி தர்ணிகாவின் மரணம் தொடர்பாக சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், ஆர்.எஸ்.புரம் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்த தர்ணிகா, கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி வந்த அவர், நேற்று காலை சுமார் 6.30 மணியளவில் குளிப்பதற்காக விடுதி குளியலறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வகுப்பிற்கு வருவார் என நினைத்த சக மாணவிகள் வகுப்புக்குச் சென்றுள்ளனர்.

தர்ணிகா வகுப்பிற்கு வராததால், பிற்பகலில் விடுதிக்குத் திரும்பிய மாணவிகள், குளியலறை கதவு நீண்ட நேரமாக பூட்டியிருப்பதை கண்டு சந்தேகமடைந்தனர். கதவை உடைத்து பார்த்தபோது, அவர் குளியலறையில் சுயநினைவின்றி கிடந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தது. விக்கிரவாண்டியில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த மாணவியின் உறவினர்கள், காலை 6.30 மணிக்கு குளிக்கச் சென்ற மாணவியை பிற்பகல் 1.30 மணி வரை யாரும் தேடாதது மிகப்பெரிய அலட்சியம் என குற்றம்சாட்டினர்.

மேலும், தர்ணிகாவுக்கு எந்தவித உடல்நலக் குறைபாடும் இல்லை என்றும், தினமும் இரவு குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசி வந்ததாகவும் தெரிவித்த அவர்கள், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில், இன்று மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...