திருப்பூரில் அடிக்கடி விபத்தை ஏற்படுத்தும் பாறை குழியை மூடாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்., கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம்!

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் அடிக்கடி விபத்தை ஏற்படுத்தும் பாறை குழியை மூடாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் அடிக்கடி விபத்தை ஏற்படுத்தும் பாறைகுழியை மூடாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 50வது வார்டு வெள்ளியங்காடு மற்றும் கே.எம் நகர் பகுதியில் உள்ள பாறைகுழியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், மழைக்காலங்களில் மழை நீரோடு, சாக்கடை நீரும் கலந்து தொற்று நோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.



இந்நிலையில், இந்த பாறைகுழியை மூட வலியுறுத்தி ஏற்கனவே பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும், ஆறு மாத காலத்தில் மூடுவதாக வாக்குறுதி அளித்து மூன்று வருடங்களுக்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்காத காரணத்தைச் சுட்டிக்காட்டி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று வெள்ளியங்காடு நால்ரோடு பகுதியில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.



இந்த போராட்டத்தையடுத்து, பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, காவல்துறையினர் மாநகராட்சி நிர்வாகத்தோடு பேசி உடனடியாக பாறைக்குழியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...