கோவையில் சாலையில் கிடைத்த பணத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்த நபர்கள்..! குவியும் பாராட்டு

கோவை: கோவையில் சாலையில் தவறவிட்ட பணத்தை போலீசில் ஒப்படைத்த தெற்கு தனியார் மின் பணியாளர்கள் நலசங்க செயலாளர்களின் நேர்மையை பொதுமக்கள் பாராட்டினர்.


கோவை: கோவை கோட்டம் தெற்கு தனியார் மின் பணியாளர்கள் நலசங்க செயலாளர்கள் ஷாகுல்ஹமீத் மற்றும் ஜாவித்அலி ஆகியோர்கள் கோவை மாவட்ட காவல் தனிப்பிரிவு அலுவலகத்தை அணுகி, கடந்த 27ம் தேதியன்று வால்பாறை சுற்றுலா சென்றிருந்த சமயம் அங்கு சோலையார் அணை பகுதியில் ஒரு பர்ஸ் கீழே கிடந்ததாக ஒப்படைத்தனர்.

அதில் சுமார் ரூ. 3,679 ரொக்கம், ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஓட்டுநர் உரிமம் இருந்தது. அதிலிருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசியதில் திருப்பூரைச் சேர்ந்த யோகேஷ் என்பவர் அவருடைய நண்பரைப் பார்க்க வால்பாறை சென்றபோது, பர்ஸ் தொலைந்து விட்டதாகவும், தன்னுடைய பர்சை அவருடைய சகோதரர் அசோக் வசம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில், இன்று தனிப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ஜெகநாதன் அவர்கள் மேற்படி பர்சை அசோக் வசம் ஒப்படைத்தார். மேலும், ஷாகுல்ஹமீத் மற்றும் ஜாவித்அலி ஆகியோர் நேர்மைக்கு பாராட்டு தெரிவித்தார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...