கோவை: கோவையில் சாலையில் தவறவிட்ட பணத்தை போலீசில் ஒப்படைத்த தெற்கு தனியார் மின் பணியாளர்கள் நலசங்க செயலாளர்களின் நேர்மையை பொதுமக்கள் பாராட்டினர்.
கோவை: கோவை கோட்டம் தெற்கு தனியார் மின் பணியாளர்கள் நலசங்க செயலாளர்கள் ஷாகுல்ஹமீத் மற்றும் ஜாவித்அலி ஆகியோர்கள் கோவை மாவட்ட காவல் தனிப்பிரிவு அலுவலகத்தை அணுகி, கடந்த 27ம் தேதியன்று வால்பாறை சுற்றுலா சென்றிருந்த சமயம் அங்கு சோலையார் அணை பகுதியில் ஒரு பர்ஸ் கீழே கிடந்ததாக ஒப்படைத்தனர்.
அதில் சுமார் ரூ. 3,679 ரொக்கம், ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஓட்டுநர் உரிமம் இருந்தது. அதிலிருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசியதில் திருப்பூரைச் சேர்ந்த யோகேஷ் என்பவர் அவருடைய நண்பரைப் பார்க்க வால்பாறை சென்றபோது, பர்ஸ் தொலைந்து விட்டதாகவும், தன்னுடைய பர்சை அவருடைய சகோதரர் அசோக் வசம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில், இன்று தனிப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ஜெகநாதன் அவர்கள் மேற்படி பர்சை அசோக் வசம் ஒப்படைத்தார். மேலும், ஷாகுல்ஹமீத் மற்றும் ஜாவித்அலி ஆகியோர் நேர்மைக்கு பாராட்டு தெரிவித்தார்.
அதில் சுமார் ரூ. 3,679 ரொக்கம், ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஓட்டுநர் உரிமம் இருந்தது. அதிலிருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசியதில் திருப்பூரைச் சேர்ந்த யோகேஷ் என்பவர் அவருடைய நண்பரைப் பார்க்க வால்பாறை சென்றபோது, பர்ஸ் தொலைந்து விட்டதாகவும், தன்னுடைய பர்சை அவருடைய சகோதரர் அசோக் வசம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில், இன்று தனிப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ஜெகநாதன் அவர்கள் மேற்படி பர்சை அசோக் வசம் ஒப்படைத்தார். மேலும், ஷாகுல்ஹமீத் மற்றும் ஜாவித்அலி ஆகியோர் நேர்மைக்கு பாராட்டு தெரிவித்தார்.