கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 2026 வரை நியாய விலைக் கடைகளில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனார் அறிவித்துள்ளார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேசன் அட்டைதாரர்களுக்கு கைரேகை பதிவு செய்ய மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 3.97 லட்சம் குடும்ப உறுப்பினர்கள் இன்னும் Bio Metric அல்லது Iris பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர்.

மாவட்டத்தில் Antyodaya Anna Yojana குடும்ப அட்டைகள் (AAY), Priority Household குடும்ப அட்டைகள் (PHH) மற்றும் Non-Priority Household குடும்ப அட்டைகள் (NPHH) பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு Point of Sale (PoS) இயந்திரத்தில் விரல் கைரேகை அல்லது கண்கருவிழி பதிவு செய்யும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது இந்த பணியில் AAY அட்டைகளில் 95.03%, PHH அட்டைகளில் 95.10% மற்றும் NPHH அட்டைகளில் 84.48% மட்டுமே நிறைவடைந்துள்ளது. கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை AAY அட்டைகளில் 7,033, PHH அட்டைகளில் 49,324 மற்றும் NPHH அட்டைகளில் 3,41,425 ஆக உள்ளது.

மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனார் வெளியிட்ட அறிவிப்பின்படி, National Food Security Act-ன் கீழ் பயன்பெறும் அனைத்து ரேசன் அட்டைதாரர்களின் குடும்பங்களில் கைரேகை பதிவு விடுபட்டுள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களுடைய நியாய விலைக் கடைகளிலோ அல்லது அருகில் உள்ள நியாய விலைக் கடைகளிலோ ஜூலை 31, 2026 தேதிக்குள் கைரேகை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

விடுபட்டுள்ள உறுப்பினர்களுக்கு கைரேகை பதிவு செய்வதற்கு வசதியாக, ஜூலை 11, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை பிற்பகல் நேரங்களில் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் நேரடியாக பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று பதிவு செய்வார்கள்.

பொதுமக்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளவும், நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கவும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கைரேகை பதிவு செய்யாத பயனாளிகள் எதிர்காலத்தில் ரேசன் பொருட்களை பெறுவதில் சிக்கலை சந்திக்க நேரிடும் என்பதால், உடனடியாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...