நீலகிரி: உதகையில் 447 கோடி ரூபாயில் மதிப்பில் 40 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக தமிழ்நாடு Dr. MGR மருத்துவ பல்கலைக் கழகத்தின் ஆய்வுக்குழு ஒருங்கிணைப்பாளர் Dr. P முருகேசன் தெரிவித்தார்.
நீலகிரி: உதகையில் 447 கோடி ரூபாயில் மதிப்பில் 40 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக தமிழ்நாடு Dr. MGR மருத்துவ பல்கலைக் கழகத்தின் ஆய்வுக்குழு ஒருங்கிணைப்பாளர் Dr. P முருகேசன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் கல்லூரி அமையவுள்ள காக்கா தோப்பு பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை கல்லூரியின் டீன் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இக்கல்லூரியில் அடுத்த கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் வகையில், கட்டுமானப் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருவதாக கூறினார்.
மேலும், இன்னும் 6 மாதங்களில் மூன்று துறைகளுக்கான பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இயற்கை சூழ்ந்த இடத்தில் மக்கள் எளிமையாக வந்து செல்கின்ற வகையில் கல்லூரி அமைய உள்ளதாகவும், ஒரு அறையில் 180 மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுதும் வகையில், அரங்கம் உள்பட பல்வேறு நவீன கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் கல்லூரி அமையவுள்ள காக்கா தோப்பு பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை கல்லூரியின் டீன் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இக்கல்லூரியில் அடுத்த கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் வகையில், கட்டுமானப் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருவதாக கூறினார்.
மேலும், இன்னும் 6 மாதங்களில் மூன்று துறைகளுக்கான பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இயற்கை சூழ்ந்த இடத்தில் மக்கள் எளிமையாக வந்து செல்கின்ற வகையில் கல்லூரி அமைய உள்ளதாகவும், ஒரு அறையில் 180 மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுதும் வகையில், அரங்கம் உள்பட பல்வேறு நவீன கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.