திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக 47 இடங்களில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக 47 இடங்களில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு அமல்படுத்தி உள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரக்கூடிய சூழ்நிலையில், திமுக மற்றும் தோழமை கட்சிகளின் சார்பாக இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனடிப்படையில், இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக மற்றும் அதன் தோழமை கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய அவர்கள், விவசாய சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இதேபோல், திருப்பூர் மாவட்டம் உடுமலை, தாராபுரம் , காங்கேயம் உள்ளிட்ட 47 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு அமல்படுத்தி உள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரக்கூடிய சூழ்நிலையில், திமுக மற்றும் தோழமை கட்சிகளின் சார்பாக இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனடிப்படையில், இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக மற்றும் அதன் தோழமை கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய அவர்கள், விவசாய சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இதேபோல், திருப்பூர் மாவட்டம் உடுமலை, தாராபுரம் , காங்கேயம் உள்ளிட்ட 47 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.