பொள்ளாச்சியில், இருசக்கர வாகனத்தில் வைத்திருக்கும் பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்து வந்த கும்பல் கைது; ரூ.9.64 லட்சம் பறிமுதல்.

பொள்ளாச்சியில், இருசக்கர வாகனத்தில் வைத்திருக்கும் பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்து வந்த கும்பல் கைது; ரூ.9.64 லட்சம் பறிமுதல்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், இருசக்கர வாகனத்தில் வைத்திருக்கும் பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்து வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து,ரூ.9.64 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம்பகுதியைச் சேர்ந்த ஜெய்கணேஷ் .இவர் கடந்த 15ம் தேதி வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தின்முன்பக்க சீட் கவரில் வைத்து விட்டு, பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள ஒரு கடையில் புத்தகம் வாங்குவதற்காக சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வாகனத்தில் வைத்திருந்த, 2 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து, ஜெய்கணேஷ் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், உடுமலை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர்.



அவர்களிடம் கட்டுக்கட்டாக பணம் இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா, காட்டு ராஜா, விஜய், ஆறுமுகம் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரித்தபோது, இவர்கள் பொள்ளச்சி, நாமக்கல் உள்ளிட்டபகுதிகளில் பணத்தை கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது.



பின்னர், அவர்களிடம் இருந்த 9 லட்சத்து 84 ஆயிரம்ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 4 கொள்ளையர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அவிநாசி சிறையில் அடைத்தனர்.

இவர்கள், வங்கிகளில் பணத்தை எடுத்து வருபவர்களை நோட்டமிட்டு, பின்தொடர்ந்து சென்று, இரு சக்கர வாகனங்களில் பணத்தை வைத்துவிட்டு சென்றால்கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பணத்தை கொள்ளையடித்து செல்வதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்த நூதன கொள்ளையர்களை கைது செய்த பொள்ளாச்சி போலீசாருக்கு பாராட்டுகள் குவிகிறது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...