கோவை அரசு கலைக் கல்லூரியில் காலி இடங்களுக்கு நாளை, நாளை மறுநாள் இறுதிக்கட்ட கலந்தாய்வு நடைபெறும்

கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி. இளங்கலை வேதியல், இயற்பியல், கணிதவியல், விலங்கியல் பி.ஏ. தமிழ் மற்றும் ஆங்கிலம், பி.பி.ஏ., பி.காம். போன்ற 24 பாடப்பிரிவுகள் உள்ளன. இந்த பாடப்பிரிவுகளுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கை இந்த மாதம் துவக்கம் முதல் நடைபெற்று வருகிறது. இந்த இடங்கள் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், இட ஒதுக்கீடு அடிப்படையிலும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி. இளங்கலை வேதியல், இயற்பியல், கணிதவியல், விலங்கியல்  பி.ஏ. தமிழ் மற்றும் ஆங்கிலம், பி.பி.ஏ., பி.காம். போன்ற 24 பாடப்பிரிவுகள் உள்ளன. இந்த பாடப்பிரிவுகளுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கை இந்த மாதம் துவக்கம் முதல் நடைபெற்று வருகிறது. இந்த இடங்கள் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், இட ஒதுக்கீடு அடிப்படையிலும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

இதனிடையே தற்போது இறுதிக்கட்ட கலந்தாய்வு நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்க உள்ளது. 

இதுகுறித்து கல்லூரி முதல்வர் சித்ரா கூறுகையில்,  "கோவை அரசு கலைக் கல்லூரியில் மொத்தம் 24 பாடப்பிரிவுகளில் 1,433 இடங்கள் உள்ளன. இதில் தற்போது வரை 1, 330 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. பி.காம்., சி.ஏ., பி.பி.ஏ. உள்ளிட்ட பாடப்பிரிவுகள் 90 சதவீதத்துக்கு மேல் நிரப்பப்பட்டு விட்டன. அறிவியல் பாடப்பிரிவில் மட்டுமே கொஞ்சம் காலி இடங்கள் உள்ளன. 

இந்த காலியிடங்களுக்கு இறுதி கலந்தாய்வு வருகிற 28ம் தேதி நடக்கும். இதில் ஏற்கனவே விண்ணப்பித்து இடங்கள் கிடைக்காத மாணவ-மாணவிகள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழுடன் கலந்து கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து மீதமுள்ள காலியிடங்களுக்கு 29-ம் தேதி கவுன்சிலிங் நடத்தப்படும். இதில் விண்ணப்பிக்காத மாணவ- மாணவிகளும் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம். இந்த காலியிடங்கள் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலும், இட ஒதுக்கீடு அடிப்படையிலும் நடத்தப்படுகிறது," என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...