கோவை: செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை இரண்டு மணி நேரத்தில் கைது செய்து, நகையை மீட்ட போலீசாருக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கோவை: செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை இரண்டு மணி நேரத்தில் கைது செய்து, நகையை மீட்ட போலீசாருக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சர்மிளா (20). இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் குறிச்சி பகுதி உள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் கண் இமைக்கும் நேரத்தில் சர்மிளா கழுத்தில் இருந்த செயினை பறித்துவிட்டு தப்பி ஓடினார்.
இது குறித்து, போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது குறிச்சி பகுதியை அதியமான் (எ) நாசர் (25) என்பதும் இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது, விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, அவரை குறிச்சி மின்மயானம் உள்ள பகுதியில் வைத்து கைது செய்ததாக போலீசாார் தெரிவித்தனர். மேலும், அவரிடம் இருந்து தங்க சங்கிலியை மீட்டனர்.
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை இரண்டு மணி நேரத்தில் பிடித்து நடவடிக்கைகள் எடுத்த காவலர்களை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் வெகுவாக பாராட்டினார். இந்நிலையில், பொதுமக்கள் தான் செயின் பறிப்பில் ஈடுபட்ட அந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சர்மிளா (20). இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் குறிச்சி பகுதி உள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் கண் இமைக்கும் நேரத்தில் சர்மிளா கழுத்தில் இருந்த செயினை பறித்துவிட்டு தப்பி ஓடினார்.
இது குறித்து, போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது குறிச்சி பகுதியை அதியமான் (எ) நாசர் (25) என்பதும் இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது, விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, அவரை குறிச்சி மின்மயானம் உள்ள பகுதியில் வைத்து கைது செய்ததாக போலீசாார் தெரிவித்தனர். மேலும், அவரிடம் இருந்து தங்க சங்கிலியை மீட்டனர்.
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை இரண்டு மணி நேரத்தில் பிடித்து நடவடிக்கைகள் எடுத்த காவலர்களை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் வெகுவாக பாராட்டினார். இந்நிலையில், பொதுமக்கள் தான் செயின் பறிப்பில் ஈடுபட்ட அந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.