பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய நிர்வாகிகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் பதவி கொடுக்கப்படவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய நிர்வாகிகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் பதவி கொடுக்கப்படவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக வின் தேசிய தலைவராக பொறுப்பேற்ற எட்டு மாதங்கள் நிறைவடைந்த நிலையில், ஜே.பி நட்டா இன்று கட்சியின் துணைத் தலைவர்கள், தேசிய பொதுச் செயலாளர்கள், தேசியச் செயலாளர், தேசிய செய்தித் தொடர்பாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்டார்.
அதில் பல மாநிலங்களை சேர்ந்த 12 தேசிய துணை தலைவர்களும், 8 செயலாளர்களும், மற்றும் இதர பொறுப்புகலுக்கான நபர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. பாஜக வின் தேசியச் செயலாளர் பதவியில் இருந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஹெச். ராஜா தற்போது அந்த பட்டியலில் இடம்பெறவில்லை.
தமிழகத்தில் தன் பலத்தை அதிகரிக்க முயற்சித்து வரும் பாஜக, இம்மாநிலத்தில் இருந்து ஒருவரை கூட தேசிய நிர்வாகிகளாக நியமிக்காதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரவை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு அமைச்சரவைக்கு பரிசீலிக்கப்படலாம், என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பாஜக இளைஞர் அணி தலைவராக கர்நாடகாவை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கு, பிரதம மந்திரி மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
