கோவை விமான நிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்களால் பரபரப்பு..! போலீசார் விசாரணை

கோவை: கோவை விமான நிலையத்தில் கழிவறையில் கிடந்த தோட்டாக்களால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை விமான நிலையத்தில் கழிவறையில் கிடந்த தோட்டாக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சர்வதேச விமான நிலையம் கோவை, திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு பயனளித்து வருகிறது.

இந்நிலையில், துப்புரவு பணியாளர் ஒருவர் இன்று மதியம் ஆண்கள் கழிவறையை சுத்தம் செய்ய சென்றபோது உள்ளே தோட்டாக்கள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், உடனடியாக இதுகுறித்து மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கும், விமான நிலைய ஆணைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, பீளமேடு போலீசார் ஆண்கள் கழிவறை வளாகத்துக்குள் கிடந்த 6 துப்பாக்கித் தோட்டாக்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விமான போக்குவரத்து மற்றும் பயணிகள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பகல் நேரத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டது விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...