கோவை: பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக சார்பில் நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
கோவை: பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக சார்பில் நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளிலும் பாதாள சாக்கடை அமைக்கும் பணி கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்காக, தமிழக அரசு சார்பில் 172 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாதாள சாக்கடை பணிகளை ஒப்பந்ததாரர்கள், குறிப்பிட்ட நேரத்தில் முடிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே, பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில், நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
இந்த மனுவில், 'பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை பணிகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்கப்படாமல், ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனை நகராட்சி நிர்வாகம் விரைந்து முடிக்க நடவடிக்கை வேண்டும், நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் சாக்கடைகளை தூர்வாரி, அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், உடுமலை ரோடு டீச்சர்ஸ் காலனி எதிரில் உள்ள இந்துக்களின் மயானத்தில் மின் விளக்குகள் மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், நகர்ப் பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், பொள்ளாச்சி மரப்பேட்டையில் உள்ள நூலகத்தை சிறந்த முறையில் பராமரித்து, பொதுமக்கள் அனைவருக்கும் பயன்படுமாறு வசதி செய்து தரவேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளிலும் பாதாள சாக்கடை அமைக்கும் பணி கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்காக, தமிழக அரசு சார்பில் 172 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாதாள சாக்கடை பணிகளை ஒப்பந்ததாரர்கள், குறிப்பிட்ட நேரத்தில் முடிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே, பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில், நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
இந்த மனுவில், 'பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை பணிகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்கப்படாமல், ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனை நகராட்சி நிர்வாகம் விரைந்து முடிக்க நடவடிக்கை வேண்டும், நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் சாக்கடைகளை தூர்வாரி, அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், உடுமலை ரோடு டீச்சர்ஸ் காலனி எதிரில் உள்ள இந்துக்களின் மயானத்தில் மின் விளக்குகள் மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், நகர்ப் பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், பொள்ளாச்சி மரப்பேட்டையில் உள்ள நூலகத்தை சிறந்த முறையில் பராமரித்து, பொதுமக்கள் அனைவருக்கும் பயன்படுமாறு வசதி செய்து தரவேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.