கோவை: பிரபல பாடகர் எஸ்.பி.பி மறைவையொட்டி கோவையில் மேடை இசை கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பாடல்களைப் பாடி இசை அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோவை: பிரபல பிரபல பாடகர் எஸ்.பி.பி மறைவையொட்டி கோவையில் மேடை இசை கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பாடல்களைப் பாடி இசை அஞ்சலி செலுத்தப்பட்டது.
உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி திரைப்பட பாடகரும், குணச்சித்திர நடிகருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து, அவரது உடல் திரைப் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவருக்கு அரசியல்வாதிகள், இசைக் கலைஞர்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், கோவையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மேடை இசை கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பில் இசை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி மேடை இசை கலைஞர்கள், எஸ்.பி பாலசுப்பிரமணியம் திரைப்படங்களில் பாடிய பாடல்களை பாடி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி திரைப்பட பாடகரும், குணச்சித்திர நடிகருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து, அவரது உடல் திரைப் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவருக்கு அரசியல்வாதிகள், இசைக் கலைஞர்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், கோவையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மேடை இசை கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பில் இசை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி மேடை இசை கலைஞர்கள், எஸ்.பி பாலசுப்பிரமணியம் திரைப்படங்களில் பாடிய பாடல்களை பாடி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.