கோவை: மத்திய அரசின் புதிய விவசாய மசோதாவை எதிர்த்து ஆனைமலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் இன்று ஸ்டேட் பேங்க் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: மத்திய அரசின் புதிய விவசாய மசோதாவை எதிர்த்து ஆனைமலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் இன்று ஸ்டேட் பேங்க் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தைச் சேர்ந்த பரமசிவம் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசின் விவசாய மசோதாவை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.

பின்னர், ஆனைமலை சேத்துமடை ரோடு ஸ்டேட் பேங்க் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தை சேர்ந்த 15 பேரை ஆனைமலை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்து அடைத்தனர். பின்னர் மாலை 5 மணிக்கு மேல் அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தைச் சேர்ந்த பரமசிவம் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசின் விவசாய மசோதாவை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.
பின்னர், ஆனைமலை சேத்துமடை ரோடு ஸ்டேட் பேங்க் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தை சேர்ந்த 15 பேரை ஆனைமலை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்து அடைத்தனர். பின்னர் மாலை 5 மணிக்கு மேல் அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.