கோவை: வேளாண்மை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: வேளாண்மை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண்மை சட்ட திருத்த மசோதாக்களை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இன்று விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சிஐடியூ உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, வேளாண்மை சட்டம் விவசாயிகளை ஒடுக்கும் வகையில் இருப்பதை சித்தரிக்கும் வகையில், விவசாயிகள் சட்டை அணியாமல் மண்வெட்டி ஏந்தியபடி இரும்பு சங்கிலியில் கட்டியபடி போராட்டம் நடத்தினர்.

இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏஐடியூசி,தொமுச உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.