கோவை: கோவையில் 50 முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரி கார்கள் மற்றும் செவித்திறன் கருவிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
கோவை: கோவையில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரி கார்கள் மற்றும் செவித்திறன் கருவிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பில் பேட்டரி மூலம் இயங்கும் 50 சக்கர நாற்காலிகள், காது கேட்கும் கருவி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
மேலும், முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு முதற்கட்டமாக பேட்டரி மூலம் இயங்கும் சக்கர நாற்காலியையும், நான்கு பேருக்கு காது கேட்கும் கருவி, வாட்டர் பெட் பொருத்திய சக்கர நாற்காலி ஆகியவற்றை வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன், மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பெரியய்யா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.