கோவை: கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் ஒற்றை காட்டுயானை தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் ஒற்றை காட்டுயானை தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் அடிக்கடி யானைகள் நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் இரவு நேரத்தில் வெளியே வரக்கூடாது என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பெரிநாயக்கன் பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கோபநாரி, காப்பு காட்டை ஒட்டியுள்ள மூணு குட்டை கிராமத்தில் காட்டு யானை தாக்கி கேரளாவை சார்ந்த ஞானபிரகாஷ் என்பவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு ஞானபிரகாஷ் மற்றும் அவரது நண்பர் அருண்குமார் இருவரும் இருசக்கர வாகனத்தில், மூணு குட்டையில் தங்கவேலு என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தோட்ட வேலையை முடித்து கொண்டு வெளியே வந்துள்ளனர்.
அப்போது, அந்தப் பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டு யானையால் தாக்கப்பட்டு ஞானபிரகாஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர், இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உயிரிழந்த ஞானபிரகாஷின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து காரமடை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் அடிக்கடி யானைகள் நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் இரவு நேரத்தில் வெளியே வரக்கூடாது என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பெரிநாயக்கன் பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கோபநாரி, காப்பு காட்டை ஒட்டியுள்ள மூணு குட்டை கிராமத்தில் காட்டு யானை தாக்கி கேரளாவை சார்ந்த ஞானபிரகாஷ் என்பவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு ஞானபிரகாஷ் மற்றும் அவரது நண்பர் அருண்குமார் இருவரும் இருசக்கர வாகனத்தில், மூணு குட்டையில் தங்கவேலு என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தோட்ட வேலையை முடித்து கொண்டு வெளியே வந்துள்ளனர்.
அப்போது, அந்தப் பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டு யானையால் தாக்கப்பட்டு ஞானபிரகாஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர், இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உயிரிழந்த ஞானபிரகாஷின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து காரமடை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.