ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு 90 நாட்கள் தண்ணீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

கோவை: ஆண்டு தோறும் அக்டோபர் மாதம், ஆழியார் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் அக்டோபர் 7ம் தேதி முதல் புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு, 2560 மில்லியன் கனஅடி தண்ணீர் வழங்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது.


கோவை: ஆண்டு தோறும் அக்டோபர் மாதம், ஆழியார் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் அக்டோபர் 7ம் தேதி முதல் புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு, 2560 மில்லியன் கனஅடி தண்ணீர் வழங்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆழியார் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், ஆழியார் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு இந்தமுறை 90 நாட்களுக்கு முழுமையாக 2880 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்க வேண்டும், என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பான மனுவை பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், கோவை மாவட்ட ஆட்சியருக்கும் விவசாயிகள் கொடுத்துள்ளனர்.

அம்மனுவில், கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2000 ம் ஆண்டு ஒரு மடை விட்டு ஒரு மடை பாசனம் நடைமுறைக்கு வந்த போது, WRO உயர்மட்டக்குழு பரிந்துரையின்படி

திருமூர்த்தி பாசன பாலாறு புதிய ஆயக்கட்டுக்கு ஒரு நாளுக்கு 85 Mcft நீர் என ஒரு சுற்றுக்கு 17 நாட்கள் வீதம் 1450 Mcft நீர் என முடிவு செய்யப்பட்டது.

ஆனால், தற்போது WRO உயர்மட்டக்குழு பரிந்துரைக்கு மாறாக ஒரு சுற்றுவை 21 நாட்கள் எனவும் ஒரு சுற்றுக்கு 1900 Mcft நீர் என கடந்த சில வருடங்களாக மாற்றியமைத்து அரசாணை பெற்று வருவதால், ஒட்டு மொத்த PAP திட்டத்திலும் நீர் பற்றாக்குறையால் குளறுபடி ஏற்படுகிறது.

அப்பற்றாக்குறை, நீரை சரி செய்ய எங்களின் பாசன நீரை கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக குறைத்து ஈடு செய்து வருகிறார்கள். இதனால், இரு மாநில பங்கீடு மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்திலும் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. இது சம்பந்தமாக, தாங்கள் உண்மைநிலை அறிந்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம், என்று அம்மணு மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...