நீலகிரி: கூடலூர் அருகே மின் மயானம் பழுதடைந்துள்ளதால், இறந்த உடல்களை எரியூட்ட தற்காலிக செட் அமைத்துத் தர முன்னாள் கவுன்சிலர் மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நீலகிரி: கூடலூர் அருகே மின் மயானம் பழுதடைந்துள்ளதால், இறந்த உடல்களை எரியூட்ட தற்காலிக செட் அமைத்துத் தர முன்னாள் கவுன்சிலர் மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட காளம்புழா பகுதியில் உள்ள மயானத்தில், இறந்த உடல்களை எரிக்கும் மின் தகனமேடை உள்ளது. இந்த மின் தகனமேடை அடிக்கடி பழுதடைந்து விடுவதால், இறந்த உடல்களை அதன் அருகில் உள்ள வெளிப்பகுதியில் வைத்து தகனம் செய்வது வழக்கமாக உள்ளது.
இதனிடையே, மழை காலங்களில் இவ்வாறு உடல்களை எரியூட்டுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளதால், இங்கு தற்காலிக செட் அமைத்து தர வேண்டும் என பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. எனினும், அதற்கு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன், கூடலூர் நகரில் இறந்த ஒருவரது உடலை தகனம் செய்வதற்கு, அவரது உறவினர்கள் காளம்புழா மயானத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், கடும் மழை காரணமாக உடலை எரியூட்டுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
இதனையடுத்து, இறந்தவரின் உறவினர்கள் அங்கு தற்காலிகமாக தகர பந்தல் அமைத்து உடலை எரியூட்டி உள்ளனர். மழை மற்றும் காற்று காரணமாக தற்காலிக பந்தல் மீது போடப்பட்ட தகரங்கள் பறந்து விடும் என்பதால் உடல் எரியூட்டப்பட்டு முடியும் வரை அருகில் நின்று தகரங்களைப் பிடித்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இதுபோன்ற அசௌகரியங்களை போக்கும் வகையில், நகராட்சி நிர்வாகம் தற்காலிக தகர செட் அமைத்து கொடுக்க வேண்டும் என நகராட்சியின் முன்னாள் 12வது வார்டு கவுன்சிலர் போஸ் மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட காளம்புழா பகுதியில் உள்ள மயானத்தில், இறந்த உடல்களை எரிக்கும் மின் தகனமேடை உள்ளது. இந்த மின் தகனமேடை அடிக்கடி பழுதடைந்து விடுவதால், இறந்த உடல்களை அதன் அருகில் உள்ள வெளிப்பகுதியில் வைத்து தகனம் செய்வது வழக்கமாக உள்ளது.
இதனிடையே, மழை காலங்களில் இவ்வாறு உடல்களை எரியூட்டுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளதால், இங்கு தற்காலிக செட் அமைத்து தர வேண்டும் என பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. எனினும், அதற்கு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன், கூடலூர் நகரில் இறந்த ஒருவரது உடலை தகனம் செய்வதற்கு, அவரது உறவினர்கள் காளம்புழா மயானத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், கடும் மழை காரணமாக உடலை எரியூட்டுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
இதனையடுத்து, இறந்தவரின் உறவினர்கள் அங்கு தற்காலிகமாக தகர பந்தல் அமைத்து உடலை எரியூட்டி உள்ளனர். மழை மற்றும் காற்று காரணமாக தற்காலிக பந்தல் மீது போடப்பட்ட தகரங்கள் பறந்து விடும் என்பதால் உடல் எரியூட்டப்பட்டு முடியும் வரை அருகில் நின்று தகரங்களைப் பிடித்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இதுபோன்ற அசௌகரியங்களை போக்கும் வகையில், நகராட்சி நிர்வாகம் தற்காலிக தகர செட் அமைத்து கொடுக்க வேண்டும் என நகராட்சியின் முன்னாள் 12வது வார்டு கவுன்சிலர் போஸ் மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.