திருப்பூரில் மின்தடையால் இருவர் பலியான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்!

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மின் மின் தட்டுப்பாடு காரணமாக அடுத்தடுத்து உயிர்கள் பலியான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மின் மின் தட்டுப்பாடு காரணமாக அடுத்தடுத்து உயிர்கள் பலியான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி அமைப்பிற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில், மின் ஒயர்கள் துண்டிக்கப்பட்டு நேற்றைய தினம் மின்தடை ஏற்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு ஆக்சிஜன் வழங்குவதில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, அடுத்தடுத்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



இந்த நிலையில், ஏற்கனவே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக அரசு தலைமை மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் மனு அளித்தும், இதுவரை சரி செய்யாத காரணத்தினால் தற்போது உயிர்பலி ஏற்பட்டிருப்பதாகவும் உடனடியாக தலைமை மருத்துவமனைக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்ய வேண்டும், தினந்தோறும் கொரணா பரிசோதனை மேற்கொள்ளப்படுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும், வட்டார அளவில் கொரோனா சிகிச்சை அளிக்கக் கூடிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...