கோவை: கோவையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், பிழைகள் திருத்தம் மேற்கொள்ளவும், கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை 22 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர், என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை: கோவையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், பிழைகள் திருத்தம் மேற்கொள்ளவும், கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை 22 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர், என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
நாடு முழுவதும் ஒரே மாதிரி இலக்கங்கள் கொண்ட வாக்காளர் அடையாள அட்டையை, இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, புதிய வாக்காளர் அட்டையில், 3 ஆங்கில எழுத்துக்களும், 7 இலக்க எண்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதன் மூலம், வாக்காளர் ஒரு தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கோ, மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் பெயர்ந்தாலும் அவரது வாக்காளர் அடையாள அட்டை எண் மாறாது. அது போன்ற சூழ்நிலையில், அவர் தன் புதிதாக இடம்பெயர்ந்து உள்ள வீட்டின் முகவரி மட்டும் மாற்றினால் போதுமானது.
கோவை மாவட்டத்தில் பழைய சீரியல் வரிசை கொண்ட வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிலாக, இந்த புதிய சீரியல் வரிசை கொண்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம் நடத்தப்பட வில்லை.
இருப்பினும், 18 வயது பூர்த்தி அடைந்தோர், வாக்காளர் பெயர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க கோரி ஆன்லைன் மூலம் தினமும் 500 பேர் முதல் 600 பேர் வரை விண்ணப்பித்து வருகின்றனர். இது தவிர, எழுத்துப் பிழை, முகவரி மாற்றம் உள்ளிட்டவை குறித்தும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் துவங்கி, தற்போது வரை 22 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க கோரியும், பிழைகள் திருத்தம் செய்ய கோரியும் இதுவரை விண்ணப்பித்து உள்ளனர். ஆன்லைன் மூலம், விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது, இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
இது குறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
நாடு முழுவதும் ஒரே மாதிரி இலக்கங்கள் கொண்ட வாக்காளர் அடையாள அட்டையை, இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, புதிய வாக்காளர் அட்டையில், 3 ஆங்கில எழுத்துக்களும், 7 இலக்க எண்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதன் மூலம், வாக்காளர் ஒரு தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கோ, மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் பெயர்ந்தாலும் அவரது வாக்காளர் அடையாள அட்டை எண் மாறாது. அது போன்ற சூழ்நிலையில், அவர் தன் புதிதாக இடம்பெயர்ந்து உள்ள வீட்டின் முகவரி மட்டும் மாற்றினால் போதுமானது.
கோவை மாவட்டத்தில் பழைய சீரியல் வரிசை கொண்ட வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிலாக, இந்த புதிய சீரியல் வரிசை கொண்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம் நடத்தப்பட வில்லை.
இருப்பினும், 18 வயது பூர்த்தி அடைந்தோர், வாக்காளர் பெயர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க கோரி ஆன்லைன் மூலம் தினமும் 500 பேர் முதல் 600 பேர் வரை விண்ணப்பித்து வருகின்றனர். இது தவிர, எழுத்துப் பிழை, முகவரி மாற்றம் உள்ளிட்டவை குறித்தும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் துவங்கி, தற்போது வரை 22 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க கோரியும், பிழைகள் திருத்தம் செய்ய கோரியும் இதுவரை விண்ணப்பித்து உள்ளனர். ஆன்லைன் மூலம், விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது, இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.