பொள்ளாச்சி ஆனைமலையில் ரிசார்ட் உரிமையாளரிடம் பணமோசடி: கேரளாவை சேர்ந்த முக்கிய குற்றவாளி கைது

கோவை: பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் ரிசார்ட் உரிமையாளரிடம் பணமோசடி செய்த வழக்கில், கேரளாவைசேர்ந்த முக்கிய குற்றவாளி கைது.


கோவை: பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் ரிசார்ட் உரிமையாளரிடம் பணமோசடி செய்த வழக்கில், கேரளாவைசேர்ந்த முக்கிய குற்றவாளி கைது.

இதுவரை இந்த வழக்கில், ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்களிடமிருந்து, ரூபாய் ஒரு கோடியே 32 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்று, கைதான அனுப்குமாரிடம் இருந்து, மூன்று சொகுசுகார்கள், தங்க நகைகள், 35 லட்சத்து 15 ஆயிரம் பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரிசார்ட் உரிமையாளர் முத்து (67). இவர், தனது ரிசாட்டை விற்பனை செய்த பணத்தை பொள்ளாச்சி, சிங்காநல்லூரில் உள்ள வங்கி லாக்கரில் வைத்திருந்தார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி வங்கி லாக்கரில் இருந்து 1 கோடியே 72 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வந்து கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையில் உள்ள அவரது மற்றொரு வங்கி லாக்கரில் வைப்பதற்காக, அவரிடம் நண்பராக பழகி வந்த கேரளா மாநிலம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த அனுபுகுமார் என்பவரிடம் கொடுத்துள்ளார். ஆனால், அனுபுகுமார், வங்கி லாக்கரில் பணத்தை வைக்காமல் பணத்துடன் தலைமறைவாகினார்.

இது குறித்து, ஆனைமலை போலீசாரிடம் பணத்தை பறிக்கொடுத்த ரிசாட் உரிமையாளர், முத்து கடந்த4 ஆம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரித்து வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக அனுப்குமாரின் நண்பர்களான கேரளாவை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து, தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளியான அனுப்குமாரை பிடிக்க மூன்று பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று செம்மணாம்பதி சோதனைசாவடி பகுதியில் போலீசார் வாகன தணிக்கை செய்த போது அங்கு, சொகுசு காரில் வந்த, அனுப்குமார், போலீசாரை பார்த்ததும், துப்பாக்கியை காட்டி மிரட்டி, அங்கிருந்து தப்பிக்க முயன்ற போது, போலீசார் விரட்டி பிடித்தனர்.



பின்பு, அனுப்குமாரை ஆனைமலை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், அவனிடம் இருந்து 3 விலை உயர்ந்த சொகுசு கார்கள், 50 பவுன் தங்க நகைகள் ரூ 35 லட்சத்து 15 ஆயிரம் பணம், நாட்டு துப்பாக்கி, 3 தோட்டா, 4-செல்போன், ஒரு ஆப்பிள் ஐபேடு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.



இதனையடுத்து, போலீசார் அனுப்குமார் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஏற்கனவே, அனுப்குமார் மீது

கேரளா மாநிலத்தில் வழிப்பறி, கடத்தல்,கொள்ளை, மோசடி என 11 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...