கோவை: இந்த ஆண்டு, கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியாக 188 மில்லி மீட்டர் அளவிற்கு பெய்யும், என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு சராசரி அளவை தாண்டி 269 மி.மீ. அளவிற்கு மழை பெய்துள்ளது.
கோவை: இந்த ஆண்டு, கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியாக 188 மில்லி மீட்டர் அளவிற்கு பெய்யும், என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு சராசரி அளவை தாண்டி 269 மி.மீ. அளவிற்கு மழை பெய்துள்ளது.
கோவையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த மழையால் கோவையில் உள்ள குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. உக்குளம், செங்குளம், பேரூர் பெரிய குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் முழுவதும் நிறைந்து உள்ளன.
தற்போது நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 450 கன அடி வீதம் தண்ணீர் செல்கிறது. கோவையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ராமநாதன் கூறுகையில்:
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியாக 188 மில்லி மீட்டர் அளவிற்கு பெய்யும். ஆனால், இந்த ஆண்டு சராசரி அளவை தாண்டி 269 மி.மீ. அளவிற்கு பெய்துள்ளது. இதில் ஜூன் மாதத்தில் 22.5 மி.மீ. மழையும், ஜூலை மாதத்தில் 83.5 மி.மீ. மழையும், ஆகஸ்ட் மாதத்தில் 49.5 மி.மீ. மழையும், இந்த மாதத்தில் தற்போது வரை 113.5 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
தென்மேற்கு பருவமழை முடிய இன்னும் சில நாட்கள் உள்ளதால், கூடுதலாக 40 மி. மீ. வரை மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த மழையால், விவசாயிகள் சம்பா நெல் சாகுபடியை தொடங்கலாம், என்றார்.
தொடர், தென்மேற்கு பருவமழை காரணமாக, கோவை உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் ஆகிய குளங்கள் 85 சதவீதம் அளவிற்கும், வெள்ளலூர் பெரியகுளம் 80 சதவீதம் அளவிற்கும் நிரம்பியுள்ளன. இந்த குளங்கள் முழு கொள்ளளவை விரைவில் எட்டும், என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த மழையால் கோவையில் உள்ள குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. உக்குளம், செங்குளம், பேரூர் பெரிய குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் முழுவதும் நிறைந்து உள்ளன.
தற்போது நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 450 கன அடி வீதம் தண்ணீர் செல்கிறது. கோவையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ராமநாதன் கூறுகையில்:
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியாக 188 மில்லி மீட்டர் அளவிற்கு பெய்யும். ஆனால், இந்த ஆண்டு சராசரி அளவை தாண்டி 269 மி.மீ. அளவிற்கு பெய்துள்ளது. இதில் ஜூன் மாதத்தில் 22.5 மி.மீ. மழையும், ஜூலை மாதத்தில் 83.5 மி.மீ. மழையும், ஆகஸ்ட் மாதத்தில் 49.5 மி.மீ. மழையும், இந்த மாதத்தில் தற்போது வரை 113.5 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
தென்மேற்கு பருவமழை முடிய இன்னும் சில நாட்கள் உள்ளதால், கூடுதலாக 40 மி. மீ. வரை மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த மழையால், விவசாயிகள் சம்பா நெல் சாகுபடியை தொடங்கலாம், என்றார்.
தொடர், தென்மேற்கு பருவமழை காரணமாக, கோவை உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் ஆகிய குளங்கள் 85 சதவீதம் அளவிற்கும், வெள்ளலூர் பெரியகுளம் 80 சதவீதம் அளவிற்கும் நிரம்பியுள்ளன. இந்த குளங்கள் முழு கொள்ளளவை விரைவில் எட்டும், என எதிர்பார்க்கப்படுகிறது.