கோவை: கோவை மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் பசுமை வீடு திட்டத்தில் 407 பழங்குடியினர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என ஊரக வளர்ச்சிதுறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் பசுமை வீடு திட்டத்தில் 407 பழங்குடியினர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என ஊரக வளர்ச்சிதுறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மாநில அரசு சார்பில், பசுமை வீடு திட்டமும், மத்திய அரசு சார்பில் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களில், வீடுகள் கட்டும் பயனாளிகளுக்கு பசுமை வீடு திட்டத்தில் ரூ.2.10 லட்சமும், பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டத்தில் ரூ.1.80 லட்சமும் நிதி அளிக்கப்படுகிறது.
இதனிடையே, பசுமை வீடு திட்டத்தில், பழங்குடியினர்களுக்கு மட்டும் ரூ.2.10 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக நிதி நடப்பு நிதியாண்டில் உயரத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்:
பசுமை வீடு திட்டத்தில் நடப்பு ஆண்டு பழங்குடியினர்களுக்கு மட்டும் திட்ட நிதி ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மற்றப் பயனாளிகளுக்கு, அதே ரூ.2.10 லட்சம் நிதி வழங்கப்படும். நடப்பு நிதியாண்டில் மாவட்டத்தில் பசுமை வீடு திட்டத்தில் 687 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், பழங்குடியினர்களுக்கு 407, ஆதி திராவிடர்களுக்கு 70, மற்றவர்களுக்கு 210 பேருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பழங்குடியினர் பயனாளிகள், பழங்குடியின நல வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். மற்ற பயனாளிகள், அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம், என்றார்.
மாநில அரசு சார்பில், பசுமை வீடு திட்டமும், மத்திய அரசு சார்பில் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களில், வீடுகள் கட்டும் பயனாளிகளுக்கு பசுமை வீடு திட்டத்தில் ரூ.2.10 லட்சமும், பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டத்தில் ரூ.1.80 லட்சமும் நிதி அளிக்கப்படுகிறது.
இதனிடையே, பசுமை வீடு திட்டத்தில், பழங்குடியினர்களுக்கு மட்டும் ரூ.2.10 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக நிதி நடப்பு நிதியாண்டில் உயரத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்:
பசுமை வீடு திட்டத்தில் நடப்பு ஆண்டு பழங்குடியினர்களுக்கு மட்டும் திட்ட நிதி ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மற்றப் பயனாளிகளுக்கு, அதே ரூ.2.10 லட்சம் நிதி வழங்கப்படும். நடப்பு நிதியாண்டில் மாவட்டத்தில் பசுமை வீடு திட்டத்தில் 687 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், பழங்குடியினர்களுக்கு 407, ஆதி திராவிடர்களுக்கு 70, மற்றவர்களுக்கு 210 பேருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பழங்குடியினர் பயனாளிகள், பழங்குடியின நல வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். மற்ற பயனாளிகள், அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம், என்றார்.