கோவையில் தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ தூய்மைப்‌ பணிகள்‌ மற்றும்‌ வளர்ச்சிப்பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணைய‌ர் ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில்‌ தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ தூய்மைப்‌ பணிகள்‌ மற்றும்‌ வளர்ச்சிப்பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில்‌ தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ தூய்மைப்‌ பணிகள்‌ மற்றும்‌ வளர்ச்சிப்பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி கொரோனா வைரஸ்‌ தொற்று பரவுதலை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முழுவீச்சுடன்‌ தொடர்ந்து செயல்படுத்திக்‌ கொண்டு வருகிறது.

இந்த நிலையில், அதன்‌ தொடர்ச்சியாக இன்று மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ கோவை மாநகராட்சிக்குட்பட்ட மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌-45க்குட்பட்ட நியூ முல்லை நகரில்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்‌ கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வரும்‌ பணிகளை பார்வையிட்டு, தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில்‌ இருப்பவர்கள்‌ சளி, காய்ச்சல்‌, இருமல்‌ போன்ற அறிகுறிகள்‌ இருப்பவர்கள்‌ கொரோனா பரிசோதனை செய்திட வேண்டும்‌, தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில்‌ உள்ளவர்கள்‌ காலை மாலை வேலைகளில்‌ கிருமிநாசினி கொண்டு வீட்டை சுத்தப்படுத்திட வேண்டும்‌. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்‌ உள்ளவர்களுக்கு காய்கறி, பால்‌ மற்றும்‌ அத்தியாவசிய பொருட்கள்‌ கிடைத்திட தொடர்புடைய அலுவலா்கள்‌ ஏற்படுத்தித்தர வேண்டும்‌ என தெரிவித்தார்.



இதனை தொடர்ந்து, அதே பகுதியில்‌ சுகாதார பணியாளர்கள்‌ வீடுவீடாக சென்று காய்ச்சல்‌, சளி, இருமல்‌ போன்ற அறிகுறி உள்ள நபர்களை கண்டறிந்து அவர்களை நடமாடும்‌ வாகனங்கள்‌ மூலம்‌ சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு வரும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர், அப்பகுதியில்‌ குடிநீர் சீராக கிடைக்கப்பெறுகிறதா என பொதுமக்களிடம்‌ கேட்டறிந்து அனைவரும்‌ முகக்கவசம்‌ கட்டாயம்‌ அணிய வேண்டும்‌, சமூக இடைவெளியை பின்பற்றிட வேண்டும்‌ என தெரிவித்தார்.



மேலும்‌, மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.45 நாராயணசாமி லே அவுட்‌ பகுதியில்‌ நுண்ணுயிர்‌ உரம்‌ NCC தயாரிப்பு கட்டிடம்‌ கட்டப்பட்டு வருவதையும்‌, சங்கனூர், கண்ணப்ப நகரில்‌ ரூ.1.5 கோடி மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டு வரும்‌ எரியூட்டும்‌ மயானக்‌ கட்டிடத்தையும்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மத்திய மண்டல உதவி ஆணையர்‌ மகேஷ்‌ கனகராஜ்‌, உதவி செயற்பொறியாளா்‌ கருப்புசாமி, மண்டல சுகாதார அலுவலா்‌ ராதாகிருஷ்ணன்‌, சுகாதார ஆய்வாளர்‌ மற்றும்‌ பணி மேற்பார்வையாளர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...