கோவையில் இடபற்றாக்குறை காரணமாக நியாயவிலை கடை முன்பு கொட்டி வைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு தொகுப்பு; பொது மக்கள் அதிர்ச்சி.

கோவையில் இடபற்றாக்குறை காரணமாக நியாயவிலை கடை முன்பு கொட்டி வைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு தொகுப்பு; பொது மக்கள் அதிர்ச்சி.

கோவை: கோவை கரும்புகடைஉள்ள இலாஹி நகர், வள்ளல் நகர், பகுதிக்கு உள்ளிட்ட நியாய விலை கடையில் விநியோகம் செய்ய கொண்டு வந்த கொரோனா பாதுகாப்பு தொகுப்புகளை,கடையின் முன் ரோட்டோரம்கொட்டி வைக்கப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலை கடைகள் மூலம் முகக்கவசம், வைட்டமின் சி-மாத்திரைகள், ஆர்சனிக் அல்பம், கபசுரக்குடிநீர் பொடி, அடங்கிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தொகுப்புகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.



கோவையில், இப்படி விநியோகம் செய்ய வைத்துள்ள நோய் தடுப்பு தொகுப்புகள் கடந்த இரண்டு நாட்களாக, இடப்பற்றாக்குறை காரணமாக, கரும்புக்கடை பகுதியில் உள்ள இலாஹி நகர், வள்ளல் நகர், பகுதிக்கு உட்பட்ட நியாய விலைக்கடையின் முன்பு, உரிய பாதுக்காப்பின்றி சாலை ஓரத்திலேயே, கொட்டி வைக்கப்பட்டுள்ளது, என அப்பகுதி தெரிவிக்கின்றனர்.

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள வழங்கப்படும், பாதுகாப்புபொருட்கள்வெளியே வைக்கபட்டு உள்ளதால், மழைபெய்தால் அனைத்து தொகுப்புகளும் நனைந்து வீணாக வாய்ப்பு உள்ளது, என அப்பகுதி பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.



இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறும் போது ரேசன் கடை வெளியே சாலை ஓரத்திலேயே இந்த கிட்டுகளை கொட்டி வைத்துள்ளதால், வாகனங்கள் கடந்து செல்லும் போது மண் தூசிகள் படிந்து, மக்களுக்கு விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படும், என தெரிவித்தனர்.

இங்கு வைக்க இடமில்லையென்றால், வேறு எதாவது பாதுகாப்பான இடத்தில் வைக்க, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...