கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி தூய்மை பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு செய்து அறிவுறுத்தல் வழங்கினார். தரமான பணிகள் உறுதி செய்யப்பட்டன.


Coimbatore: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் வார்டு எண் 27ல் பல்வேறு மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் ஆய்வு செய்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.




பீளமேடு சூர்யா கார்டன் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல், தரமான முறையில் சாலை அமைக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது வார்டு உதவி பொறியாளர் குமார் உடனிருந்தார்.






அதேபோல், வார்டு எண் 27ல் உள்ள பீளமேடு துரைசாமி நாயுடு லேஅவுட் பகுதியில் மாஸ் கிளீனிங் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாலையோர செடிகள், குப்பைகள் மற்றும் சாக்கடைகளை முழுமையாக அகற்றி சுத்தம் செய்ய தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன் மூலம் பகுதியை தூய்மையாக பராமரிக்கும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.






சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீளமேடு பாரதி காலனி பகுதியில் செயல்படும் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையத்தை கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் வருகைப் பதிவேடு மற்றும் குழந்தைகள் தடுப்பூசி பதிவேடுகளை விரிவாக ஆய்வு செய்தார். ஆய்வின்போது மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உடனிருந்து தேவையான விளக்கங்களை வழங்கினர்.






மேலும், பீளமேடு ஸ்ரீ கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளி முன்பகுதியில் மரக்குப்பைகள் அகற்றப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டது. பணிகளை நேரில் பார்வையிட்ட கவுன்சிலர் அம்பிகா தனபால், பள்ளி அமைந்துள்ள பகுதி என்பதால் குப்பைகள் மற்றும் மரக்குப்பைகளை தினசரி அகற்றுமாறு வார்டு சூப்பர்வைசருக்கு உறுதியான அறிவுறுத்தல் வழங்கினார்.






இவ்வாறு வார்டு 27ல் மேற்கொள்ளப்படும் பல்வேறு மேம்பாட்டு மற்றும் தூய்மை பணிகள் பொதுமக்களின் நல்வாழ்வுக்காக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...