கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான சசிகுமார் (37) என்பவர் உயிரிழந்தார்.


கோவை: கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் ராமகிருஷ்ணா வித்யாலயா அருகே உள்ளமேம்பாலம் ஏறும் இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

விபத்து குறித்து போலீசார் தெரிவித்ததாவது, கோவை அசோக் புரத்தைச் சேர்ந்த சசிகுமார் (37), பிரிகால் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இன்று அதிகாலை தனது காரில் கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமகிருஷ்ணா வித்யாலயா மேம்பாலம் ஏறும் பகுதியில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே அமைந்திருந்த தடுப்புச் சுவரில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில் காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்ததுடன், சசிகுமார் தலையில் பலத்த காயமடைந்தார். தகவலறிந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்குள்ளான வாகனத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.



இந்தச் சம்பவம் தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...