கோவையில் பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்த இளம் ஜோடி தற்கொலை; ஒருவர் பலி

கோவையில் பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்த இளம் ஜோடி தற்கொலை; ஒருவர் பலி.

கோவை: கோவையில் பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்த இளம் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்கல்பெகு (24) அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர், கோவை ராமநாதபுரம் அருகே ராமலிங்க ஜோதி நகரில் வசித்து வரும் இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார்.

இதனிடையே, இவர் கடந்த 6 மாத காலமாக பேஸ்புக் மூலம் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த 10 ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இதற்கு அவர்கள் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

திருமணத்தை தொடர்ந்து, பொருளாதார ரீதியாக மிகுந்த நெருக்கடியை சந்தித்து வந்துள்ளனர். இதனால், தம்பதிகள் இருவரும் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படும் நிலையில், இருவரும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றனர்.

இதில், அக்கல்பெகு சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவரது மனைவி அதிர்ஷ்ட வசமாக உயிருடன் மீட்கப்பட்டார்.

கோவை ராமநாதபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...