கோவையில் பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்த இளம் ஜோடி தற்கொலை; ஒருவர் பலி.
கோவை: கோவையில் பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்த இளம் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்கல்பெகு (24) அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர், கோவை ராமநாதபுரம் அருகே ராமலிங்க ஜோதி நகரில் வசித்து வரும் இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார்.
இதனிடையே, இவர் கடந்த 6 மாத காலமாக பேஸ்புக் மூலம் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த 10 ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இதற்கு அவர்கள் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
திருமணத்தை தொடர்ந்து, பொருளாதார ரீதியாக மிகுந்த நெருக்கடியை சந்தித்து வந்துள்ளனர். இதனால், தம்பதிகள் இருவரும் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படும் நிலையில், இருவரும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றனர்.
இதில், அக்கல்பெகு சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவரது மனைவி அதிர்ஷ்ட வசமாக உயிருடன் மீட்கப்பட்டார்.
கோவை ராமநாதபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அக்கல்பெகு (24) அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர், கோவை ராமநாதபுரம் அருகே ராமலிங்க ஜோதி நகரில் வசித்து வரும் இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார்.
இதனிடையே, இவர் கடந்த 6 மாத காலமாக பேஸ்புக் மூலம் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த 10 ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இதற்கு அவர்கள் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
திருமணத்தை தொடர்ந்து, பொருளாதார ரீதியாக மிகுந்த நெருக்கடியை சந்தித்து வந்துள்ளனர். இதனால், தம்பதிகள் இருவரும் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படும் நிலையில், இருவரும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றனர்.
இதில், அக்கல்பெகு சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவரது மனைவி அதிர்ஷ்ட வசமாக உயிருடன் மீட்கப்பட்டார்.
கோவை ராமநாதபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.