பொள்ளாச்சியில் நேற்று 11 பேருக்கு கொரோனா தொற்று; இருவர் பலி..!

பொள்ளாச்சியில் நேற்று 11 பேருக்கு கொரோனா தொற்று; இருவர் பலி.

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நேற்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது எனவும் இதில் மூதாட்டி உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

பொள்ளாச்சி சரோஜினி வீதியை சேர்ந்த 85 வயது முதியவர், கிருஷ்ணசாமி வீதியை சேர்ந்த 70 வயது முதியவர், ரங்கசமுத்திரம் 71 வயது முதியவர், குஞ்சிபாளையம் - சக்தி கார்டன் 64 வயது முதியவர், ஜமீன் ஊத்துக்குளி 19 வயது ஆண். கரப்பாடி 75 வயது ஆண், ஆனைமலை அப்துல் நகர் 48 வயது பெண், ஆனைமலை அண்ணாநகர் 21வயது ஆண், அங்கலக்குறிச்சி 35 வயது ஆண், ஆகியோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

மேலும், ஆனைமலை ராமலிங்கம் வீதியை சேர்ந்த 55 வயது ஆண், சுய நினைவு இல்லாததால் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .பின், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா உறுதியாகிய நிலையில், அவர் இறந்தார்.

தொடர்ந்து, ஜமீன் முத்தூர் பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டி உடல்நிலை குறைவால் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரும் சிகிச்சைபலனின்றி இறந்தார்.

தொற்று பாதிக்கப்பட்ட மற்றும் இறந்தவர்களின் வீடுகளில் மற்றும் சுற்றியுள்ள இடங்களில், சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...