கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகணேஷ் (40). இவர், தனியார் நிறுவனத்தில் கணக்கு மேற்பார்வையாளராக உள்ளார்.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகணேஷ் (40). இவர், தனியார் நிறுவனத்தில் கணக்கு மேற்பார்வையாளராக உள்ளார்.
இவர் பணிபுரியும் நிறுவனத்தில் வேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக, பொள்ளாச்சி நியூ ஸ்கீம் ரோட்டில் உள்ள TMB வங்கி ஏடிஎம்மில் இருந்து 2 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து வந்து, அவர் வாகனத்தில் வைத்துவிட்டு, பொள்ளாச்சி கடைவீதியில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து, திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தல் வைத்திருந்த பணம் திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து, ஜெயகணேஷ் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின், அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் பணிபுரியும் நிறுவனத்தில் வேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக, பொள்ளாச்சி நியூ ஸ்கீம் ரோட்டில் உள்ள TMB வங்கி ஏடிஎம்மில் இருந்து 2 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து வந்து, அவர் வாகனத்தில் வைத்துவிட்டு, பொள்ளாச்சி கடைவீதியில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து, திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தல் வைத்திருந்த பணம் திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து, ஜெயகணேஷ் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின், அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.