கோவை: கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் மேம்பால பணிகள் நடந்து வருகிறது. தற்போது இப்பகுதியில் அணுகு சாலைகளை விரிவுப்படுத்தும் பணி விரைவில் துவங்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
கோவை: கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் மேம்பால பணிகள் நடந்து வருகிறது. தற்போது இப்பகுதியில் அணுகு சாலைகளை விரிவுப்படுத்தும் பணி விரைவில் துவங்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில், கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி கல்யாண மண்டம் வரை சுமார் 6000 மீட்டர் நீளத்தில் சுமார் 29 தூண்களுடன் உயர்மட்ட மேட்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதே போல, ஜி.என். மில்ஸ் சந்திப்பில் சுமார் 670 மீட்டர் நீளத்தில் சுமார் 15 துாண்களுடன் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கியது.

இதனிடையே, மேம்பால பணிகள் காரணமாக கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் காலை முதல் மாலை வரை கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், மேம்பால பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதனால், மேம்பால பணிகளை விரைந்து முடிக்க, ஏதுவாக போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கவுண்டம்பாளையம் மேம்பால பணிகள் தொய்வு இல்லாமல் நடக்க அப்பகுதியில் உள்ள அணுகு சாலைகள் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், போக்குவரத்து நெரிசல் ஒரளவு கட்டுப்படுத்தப்படும். மேலும், அவ்வழியாக கனரக வாகனங்களை தவிர்த்து ஆம்புலன்ஸ், கார் மற்றும் இருசக்கர வாகனங்களை மட்டும் அனுமதிக்க அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்," என்றார்.