கவுண்டம்பாளையம் மேம்பால பணிகள்: அணுகு சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் விரைவில் துவங்கும் என அதிகாரிகள் தகவல்

கோவை: கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் மேம்பால பணிகள் நடந்து வருகிறது. தற்போது இப்பகுதியில் அணுகு சாலைகளை விரிவுப்படுத்தும் பணி விரைவில் துவங்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.



கோவை: கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் மேம்பால பணிகள் நடந்து வருகிறது. தற்போது இப்பகுதியில் அணுகு சாலைகளை விரிவுப்படுத்தும் பணி விரைவில் துவங்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில், கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி கல்யாண மண்டம் வரை சுமார் 6000 மீட்டர் நீளத்தில் சுமார் 29 தூண்களுடன் உயர்மட்ட மேட்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதே போல, ஜி.என். மில்ஸ் சந்திப்பில் சுமார் 670 மீட்டர் நீளத்தில் சுமார் 15 துாண்களுடன் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கியது.



இதனிடையே, மேம்பால பணிகள் காரணமாக கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் காலை முதல் மாலை வரை கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், மேம்பால பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

இதனால், மேம்பால பணிகளை விரைந்து முடிக்க, ஏதுவாக போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. 

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கவுண்டம்பாளையம் மேம்பால பணிகள் தொய்வு இல்லாமல் நடக்க அப்பகுதியில் உள்ள அணுகு சாலைகள் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், போக்குவரத்து நெரிசல் ஒரளவு கட்டுப்படுத்தப்படும். மேலும், அவ்வழியாக கனரக வாகனங்களை தவிர்த்து ஆம்புலன்ஸ், கார் மற்றும் இருசக்கர வாகனங்களை மட்டும் அனுமதிக்க அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்," என்றார்.

Newsletter

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...