பொள்ளாச்சி பொங்காளியூர் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கிராம மக்கள் கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் மனு!

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள பொங்காளியூர் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கிராம மக்கள் கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள பொங்காளியூர் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கிராம மக்கள் கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பொங்காளியூர் புதுகாலனி மதுரை வீரன் கோயில் அருகே வசிக்கும் பொதுமக்களுக்கு தெருவிளக்கு, சாலை தண்ணீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று பலமுறை பேரூராட்சி அலுவலகத்தில், பொதுமக்கள் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.



இந்நிலையில், ஆனைமலை கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் யுவராஜ் தலைமையில் கோட்டூர் பேரூர் கழக செயலாளர் ரவிச்சந்திரன், முன்னிலையில் இன்று பொதுமக்கள் கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கொடுக்கப்பட்டது.

கோட்டூர் பேரூராட்சிக்குட்பட்ட பொங்காளியூர் புதுகாலனியில், 15 வார்டுகள் உள்ளன. இங்குள்ள மக்கள் நத்தம் புறம்போக்கு பகுதியில் வசித்து வந்தனர். கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் அரசு சார்பில் இந்த இடத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரையில் பேரூராட்சி சார்பில் வீட்டு வரி ரசீது தரப்படவில்லை.



மேலும் தெருவிளக்கு, குடிநீர் குழாய், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என பலமுறை பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. எனவே, இந்தமுறை பேரூராட்சி நிர்வாகம் முறையாக ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...