கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள பொங்காளியூர் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கிராம மக்கள் கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள பொங்காளியூர் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கிராம மக்கள் கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பொங்காளியூர் புதுகாலனி மதுரை வீரன் கோயில் அருகே வசிக்கும் பொதுமக்களுக்கு தெருவிளக்கு, சாலை தண்ணீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று பலமுறை பேரூராட்சி அலுவலகத்தில், பொதுமக்கள் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், ஆனைமலை கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் யுவராஜ் தலைமையில் கோட்டூர் பேரூர் கழக செயலாளர் ரவிச்சந்திரன், முன்னிலையில் இன்று பொதுமக்கள் கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கொடுக்கப்பட்டது.
கோட்டூர் பேரூராட்சிக்குட்பட்ட பொங்காளியூர் புதுகாலனியில், 15 வார்டுகள் உள்ளன. இங்குள்ள மக்கள் நத்தம் புறம்போக்கு பகுதியில் வசித்து வந்தனர். கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் அரசு சார்பில் இந்த இடத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரையில் பேரூராட்சி சார்பில் வீட்டு வரி ரசீது தரப்படவில்லை.

மேலும் தெருவிளக்கு, குடிநீர் குழாய், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என பலமுறை பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. எனவே, இந்தமுறை பேரூராட்சி நிர்வாகம் முறையாக ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.
கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பொங்காளியூர் புதுகாலனி மதுரை வீரன் கோயில் அருகே வசிக்கும் பொதுமக்களுக்கு தெருவிளக்கு, சாலை தண்ணீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று பலமுறை பேரூராட்சி அலுவலகத்தில், பொதுமக்கள் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், ஆனைமலை கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் யுவராஜ் தலைமையில் கோட்டூர் பேரூர் கழக செயலாளர் ரவிச்சந்திரன், முன்னிலையில் இன்று பொதுமக்கள் கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கொடுக்கப்பட்டது.
கோட்டூர் பேரூராட்சிக்குட்பட்ட பொங்காளியூர் புதுகாலனியில், 15 வார்டுகள் உள்ளன. இங்குள்ள மக்கள் நத்தம் புறம்போக்கு பகுதியில் வசித்து வந்தனர். கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் அரசு சார்பில் இந்த இடத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரையில் பேரூராட்சி சார்பில் வீட்டு வரி ரசீது தரப்படவில்லை.
மேலும் தெருவிளக்கு, குடிநீர் குழாய், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என பலமுறை பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. எனவே, இந்தமுறை பேரூராட்சி நிர்வாகம் முறையாக ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.