திருப்பூரில் வீட்டில் கழிவாக உள்ள தேங்காய் சிரட்டையில் கைவினைப் பொருட்களை செய்து அசத்தும் மாணவி..!

திருப்பூர்: கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் நேரங்களை வீணடிக்காமல் புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என ஆரம்பித்து, தற்போது அதன் மூலமே வருமானமும் ஈட்டி வருகிறார் திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவி.


திருப்பூர்: கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் நேரங்களை வீணடிக்காமல் புதிதாக எதையாவது கற்று கொள்ள வேண்டும் என ஆரம்பித்து, தற்போது அதன் மூலமே வருமானமும் ஈட்டி வருகிறார் திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவி. அவர் வித்தியாசமாக என்ன செய்ய கற்றுக்கொண்டார் ? எப்படி அதன் மூலம் வருமானம் ஈட்டுகிறார் என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள்.

உலகில் கைவினைப் பொருட்களுக்கான தேடல் என்பது எப்பொழுதும் அதிகம். அதிலும், தேவையில்லாத பொருட்களில் இருந்து அழகழகான கைவினைப் பொருட்கள் செய்வது கலைஞர்களுக்கும் பிடித்தமான ஒன்று. முட்டை ஓடுகள் மீது உருவங்கள் வரைவது, பென்சிலின் நுனிப்பகுதியில் சிலை அமைப்பதை தொடர்ந்து தற்போது திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் வீடுகளில் கழிவாக இருக்கும் தேங்காய் சிரட்டையில் இருந்து கைவினைப் பொருட்களை உருவாக்கி அசத்தி வருகிறார்.



நிப்டி என்ற கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி, ஊரடங்கு காலத்தில் வீணாக நேரத்தை கடக்காமல் இருக்க வீட்டில் இருந்த படியே இதனை செய்ய ஆரம்பித்துள்ளார். தான் நன்றாக பழகியதோடு மட்டுமல்லாமல் அதனை விற்று வருமானமாகவும் மாற்றி வருகிறார்.



திருப்பூர் ஆடை வடிவமைப்பு கல்லூரி மாணவி ஸ்வேதா வீடுகளில் கழிவுகளாக இருக்கும் தேங்காய் சிரட்டையில் விநாயகர் சிலை, கப்பல், பூச்செடி, ராட்சத எறும்பு, வாத்து, ஆட்டோ என தற்போது வரை 100க்கும் மேற்பட்ட கலைநயமிக்க பொருட்களை உருவாக்கி வருகிறார். பொருட்களின் வடிவமும் சரி, அதன் மீதான மேல்பூச்சும் சரி, இந்த கைவினைப் பொருள் தேங்காய் சிரட்டையில் செய்யப்பட்டது என்பதை மறக்கடித்து, அந்த பொருளின் கலைநயத்தை மட்டுமே பார்க்க தூண்டுகிறது.



இது தவிர பாட்டில்களின் மீதான கலைப்பொருட்களையும் தற்போது செய்ய ஆரம்பித்துள்ளார் இந்த மாணவி. தெரிந்தவர்கள் மூலம் செய்த பொருட்களை விற்பனை செய்வதால் பெற்றோர்களும் இதற்கு முழு ஊக்கம் கொடுப்பதாக சொல்கிறார். தற்போது தான் கற்றுக்கொள்ள துவங்கியுள்ளதால், சிறு சிறு பொருட்களை எப்படி தத்ரூபமாக செய்ய வேண்டும் என செய்து வருவதாகவும், வரும் காலத்தில் இந்த கலையை மற்றவர்களுக்கு எளிதில் சொல்லிக்கொடுப்பதோடு இதற்கென தனியாக ஒரு கடையை ஆரம்பிக்க வேண்டும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் இந்த மாணவி.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...