மீண்டும் எடப்பாடி.. வேண்டும் எடப்பாடி..! முதலமைச்சர் பழனிசாமி ஆட்சி தொடர வேண்டுமென கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு!

கோவை: மீண்டும் எடப்பாடி, வேண்டும் எடப்பாடி என தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர வேண்டுமென கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கோவை: மீண்டும் எடப்பாடி, வேண்டும் எடப்பாடி என தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர வேண்டுமென கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. திமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினை முதலமைச்சராக்குவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதன் மூலம் திமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் ஸ்டாலின் என்பது உறுதியாகியுள்ளது.

அதேசமயம், அதிமுக கூட்டணியில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில், கோவையில் குனியமுத்தூர், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர வேண்டும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நேதாஜி சுபாஷ் சேனை தமிழ்நாடு என்ற பெயரில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரின் படங்களுடன் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 'எடப்பாடியாரை புறம் பேசுபவர்கள் இதைப் படித்த பின்னராவது திருந்தட்டும்' என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் திட்டங்களை பட்டியலிட்டுள்ளனர்.

மேலும் 'இவை ஒரு சிலவே, பட்டியலிட்டால் கணக்கிலடங்காது. மக்களின் முதல்வர் எடப்பாடியாரை குறை சொன்னால் நாக்கு அழுகிவிடும் என்றும் மீண்டும் எடப்பாடி, வேண்டும் எடப்பாடி' என போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...