கோவை பீளமேடு அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்புறம் மேற்கூரை அமைக்க கோரிக்கை

கோவை: கோவை பீளமேடு அருகே மாநகராட்சியின் 38வது வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்புறம் உள்ள வளாகத்தில் மேற்கூரையும், இருக்கை வசதியும், செய்து தரக்கோரி, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: கோவை பீளமேடு அருகே மாநகராட்சியின் 38வது வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்புறம் உள்ள வளாகத்தில் மேற்கூரையும், இருக்கை வசதியும், செய்து தரக்கோரி, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இந்த சுகாதார நிலையத்திற்கு ஏ.டி காலனி, கடல் ரோடு, தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு பகுதி, நேரு நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பல்வேறு விதமான சிகிச்சைகளுக்கும், பரிசோதனைகளுக்கும் வந்து செல்கின்றனர். 



இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பான சிகிச்சை முறை அளிக்கப்படுவதால், இதனை சுற்றி உள்ள பொதுமக்கள் வேறு மருத்துவமனைக்கு செல்லாமல் இங்கேயே வந்து மருத்துவம் பார்த்து செல்கின்றனர்.

இது குறித்து ம.தி.மு.க பீளமேடு பகுதி கழக செயலாளர் வெள்ளியங்கிரி கூறுகையில்: 

ஒரே நேரத்தில், இந்த சுகாதார நிலையத்தில், ஐந்து நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க இடவசதி உள்ளது. அறையின் வெளியே போதுமான இடவசதி உள்ள போதிலும், அங்கு மேற்கூரை வசதி, இருப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்பதால் அதை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. 



இதனால் மருத்துவத்திற்காக, வரும் பொதுமக்கள் வெயில், மழையில் நின்று காத்திருந்து சிகிச்சை பெற்றுச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் ஆகியோர் வெயிலில் வந்து நின்று செல்லும் போது, சில நேரங்களில் மயக்கமடைந்து கீழே விழும் சூழலும் ஏற்படுகிறது. 



எனவே, காலியாக உள்ள இடத்தில் உடனடியாக மேற்கூரை அமைத்து தர வேண்டும். மேலும், இருக்கை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக அமைத்துத் தந்தால் அப்பகுதி மக்கள் பயனடைவார்கள், என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...