பொள்ளாச்சி அருகே பிறந்து 20 நாட்கள் ஆன ஆண் குழந்தையை விற்ற இடைத்தரகர் உள்ளிட்ட 3 பேர் கைது..!

பொள்ளாச்சி அருகே பிறந்து 20 நாட்கள் ஆன ஆண் குழந்தையை 80 ஆயிரம்  ரூபாய்க்கு விற்பனை பெண் இடைத்தரகர் மற்றும் குழந்தையை விலைக்கு வாங்கிய கணவன் மனைவி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே பிறந்து 20 நாட்கள் ஆன ஆண் குழந்தையை 80 ஆயிரம்ரூபாய்க்கு விற்பனை பெண் இடைத்தரகர் மற்றும் குழந்தையை விலைக்கு வாங்கிய கணவன் மனைவி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை செட்டிபாளையத்தைசேர்ந்த ராஜேஷ்குமார், இவரது மனைவி கோகிலா இவர்களுக்கு திருமணமாகி, பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இந்நிலையில், தங்களுக்கு குழந்தை வேண்டும் என்று இவரது தோழியான பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் புலியங்கண்டியை சேர்ந்த பெளலினா என்ற பெண்ணை அணுகியுள்ளனர். 

அதே சமயம், அங்கலக்குறிச்சியை சேர்ந்த சலவைத் தொழிலாளி முருகவேல், சுதா தம்பதியினருக்குகடந்த 20 நாட்களுக்கு முன்புஆண் குழந்தை பிறந்தது. இதை தெரிந்து கொண்ட பெளலினா அவர்களை தொடர்பு கொண்டு, குழந்தையை விற்றால் ரூபாய் 80,000கொடுப்பதாக கூறியுள்ளார். 

பின்னர், ராஜேஷ்குமார், கோகிலா, பெளலினா மூவரும் பணத்தை கொடுத்துவிட்டு குழந்தையை வாங்கி கொண்டு சென்று விட்டனர். 

இது குறித்துஅக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் கோவை குழந்தைகள் நல அலுவலகத்திற்கு புகார் தெரிவித்தனர். 

இதனையடுத்து அதிகாரிகள், ஆழியார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், குழந்தையை விலைக்கு வாங்கிய ராஜேஷ்குமார் அவரது மனைவி கோகிலா மற்றும் இடைத்தரகராக இருந்த பெளலினாஉள்ளிட்ட 3 பேரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பிறந்து 20 நாட்கள் ஆன குழந்தையை விற்பனை செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...