வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஆண் யானை உயிரிழப்பு - வனத்துறையினர் விசாரணை!

கோவை: வால்பாறை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஆண் யானை மரணம் அடைந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: வால்பாறை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஆண் யானை மரணம் அடைந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஆண் யானை ஒன்று இறந்த சம்பவம் வனத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட வாட்டர்பால் தேயிலைத் தோட்டப் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.



பின்னர் வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திரன், மணிகண்டன், வனவர் முனியாண்டி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானையின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். வனத்துறையின் சிறப்பு மருத்துவர் சுகுமார் தலைமையிலான குழுவினர் யானையின் உடலில் உடல்கூறு ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.



இதனை தொடர்ந்து, யானையின் முக்கிய பாகங்கள் வனத்துறை ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இறந்தது ஆண் யானை என்றும் வயது 30 லிருந்து 35 க்குள் இருக்கலாம் என்றும் தெரிவித்தனர். உடல்கூறு ஆய்வுக்குப் பின் இறந்த யானையின் உடல் அங்கேயே புதைக்கப்படுகிறது.காட்டு யானை இறப்பு குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நேற்று மதியம் வாட்டர் பால் இடைச்சோலைப் பகுதியில் காட்டு யானைகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டதாகவும் அதில் ஒரு யானைக்கு தும்பிக்கை மற்றும் தந்தம் பகுதியில் ரத்தம் வடிய வடிய வனப்பகுதிக்குள் சென்றதை பார்த்ததாக தெரிவித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...