பொள்ளாச்சி நகர் பகுதியில் செயலிழந்து கிடக்கும் சிசிடிவி கேமராக்கள்; குற்ற சம்பவங்களை கண்காணிப்பதில் சிக்கல்

கோவை: பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் குற்ற சம்பவங்களை கண்காணிப்பதற்காக, காவல்துறை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.

கோவை: பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் குற்ற சம்பவங்களை கண்காணிப்பதற்காக, காவல்துறை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.



பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவாக பிடிக்க, காவல் துறையினருக்கு பெரும் உதவியாக இருந்து வரும், சிசிடிவி கேமராக்கள் தற்போது பராமரிப்பின்றி இருப்பதால் குற்ற சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.



குறிப்பாக, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பொள்ளாச்சி கடைவீதி, பேருந்து நிலைய சிக்னல், கோவை ரோடு, வெங்கடேசா காலனி உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை சார்பில் வைக்கப்பட்ட கேமராக்கள், பழுதடைந்து, உடைந்து தொங்குகின்றன. மேலும், பல்வேறு கேமராக்கள் பழுதாகி செய்யல்படாமல் உள்ளன என்று கூறப்படுகிறது.



தற்போது, ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால். மீண்டும் பொள்ளாச்சி நகர் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்து உள்ளதால், கண்காணிப்பு பணியில் தொய்வு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, செயல்படாமல் உள்ள கேமராக்களை உடனடியாக சீரமைக்க வேண்டும், மேலும் சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறைகளில், காவல்துறையினர் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும், என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...