கோவை: கொரோனா நோய் தாக்குதல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில், வரும் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த தமிழகத்தில் அரசு தடை விதித்துள்ளது.
கோவை: கொரோனா நோய் தாக்குதல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில், வரும் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த தமிழகத்தில் அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், தடையை மீறி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, விசர்ஜன ஊர்வலம் நடத்தப்படும் என்று இந்து அமைப்புகள் அறிவிப்பு விடுத்துள்ளன.

கொரோனா நோய் வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் மூலம் நோய்த்தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது, எனவே விநாயகர் சிலை பிரதிஷ்டை மற்றும் ஊர்வலத்திற்கு அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும், தடையை மீறி ஊர்வலம் நடத்தும் இந்து அமைப்புகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொள்ளாச்சியில், திராவிட இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தடையை மீறி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, விசர்ஜன ஊர்வலம் நடத்தப்படும் என்று இந்து அமைப்புகள் அறிவிப்பு விடுத்துள்ளன.
கொரோனா நோய் வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் மூலம் நோய்த்தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது, எனவே விநாயகர் சிலை பிரதிஷ்டை மற்றும் ஊர்வலத்திற்கு அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும், தடையை மீறி ஊர்வலம் நடத்தும் இந்து அமைப்புகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொள்ளாச்சியில், திராவிட இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.