கோவை: கோவை காரமடை அருகே 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை: கோவை காரமடை அருகே 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை மாவட்டம் காரமடை பெள்ளத்தி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சிவலிங்கம் (26). அதே பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக சிவலிங்கம் ஆசை வார்த்தை கூறிய நிலையில், பாலியல் உறவின் காரணமாக சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது, சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னர் இது குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சைல்ட் லைன் அமைப்பு நிர்வாகி ஏஞ்சலின் அளித்த புகாரின் பேரில், சிவலிங்கத்தை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
சிவலிங்கத்திற்கு சிறுமியுடன் வருகின்ற 21ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டம் காரமடை பெள்ளத்தி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சிவலிங்கம் (26). அதே பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக சிவலிங்கம் ஆசை வார்த்தை கூறிய நிலையில், பாலியல் உறவின் காரணமாக சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது, சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பின்னர் இது குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சைல்ட் லைன் அமைப்பு நிர்வாகி ஏஞ்சலின் அளித்த புகாரின் பேரில், சிவலிங்கத்தை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
சிவலிங்கத்திற்கு சிறுமியுடன் வருகின்ற 21ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.