கோவை: மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை கண்டித்து கேம்பஸ் ஃபரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் கோவை கரும்புகடை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை கண்டித்து கேம்பஸ் ஃபரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் கோவை கரும்புகடை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் அபுதாஹீர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தேசிய கல்வி கொள்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மத்தியில் ஆளும் பாஜக அரசானது கல்வியில் காவியை புகுத்தி மாணவர்களின் கல்வி கனவை கேள்வி குறியாக்கும் வகையில் குலக் கல்வியை புகுத்தும் வகையிலும் வரையறை செய்யப்பட்டு கொண்டுவந்துள்ள இந்த தேசிய கல்விக்கொள்கையை வண்மையாக கண்டிப்பதாக தெரிவித்தனர்.
அதேபோல, இந்த தேசிய கல்வி கொள்கை மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் எனவும் இந்த தேசிய கல்விக்கொள்கையை ஒருபோதும் மாணவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தனர். இதனை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு பிரச்சாரங்களை முன்னெடுத்து செல்வதாகவும் அதன் ஒரு பகுதியாக, இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அப்போது தெரிவித்தனர்.
மேலும், சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வரும் மத்திய அரசானது கல்வியில் காவியை புகுத்தும் வேலையை கைவிட வேண்டும், தேசிய கல்வி கொள்கையை ஒருபோதும் ஏற்க முடியாது என கோஷங்கள் எழுப்பினர்.
மாவட்ட தலைவர் அபுதாஹீர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தேசிய கல்வி கொள்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மத்தியில் ஆளும் பாஜக அரசானது கல்வியில் காவியை புகுத்தி மாணவர்களின் கல்வி கனவை கேள்வி குறியாக்கும் வகையில் குலக் கல்வியை புகுத்தும் வகையிலும் வரையறை செய்யப்பட்டு கொண்டுவந்துள்ள இந்த தேசிய கல்விக்கொள்கையை வண்மையாக கண்டிப்பதாக தெரிவித்தனர்.
அதேபோல, இந்த தேசிய கல்வி கொள்கை மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் எனவும் இந்த தேசிய கல்விக்கொள்கையை ஒருபோதும் மாணவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தனர். இதனை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு பிரச்சாரங்களை முன்னெடுத்து செல்வதாகவும் அதன் ஒரு பகுதியாக, இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அப்போது தெரிவித்தனர்.
மேலும், சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வரும் மத்திய அரசானது கல்வியில் காவியை புகுத்தும் வேலையை கைவிட வேண்டும், தேசிய கல்வி கொள்கையை ஒருபோதும் ஏற்க முடியாது என கோஷங்கள் எழுப்பினர்.