கோவையில் 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த 70 வயது நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

கோவையில் 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த 70 வயது நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

கோவை: கோவை இராமநாதபுரம் பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த 70 வயதுடைய முதியவரை, போலீசார் போக்சோசட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கோவை, இராமநாதபுரம், கிருஷ்ணன் கோவில் வீதியை சேர்ந்தவர் கனகராஜ். 70 வயதான இவர், அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், இன்று பிற்பகல் அவரது கடைக்கு திண்பண்டம்வாங்க வந்த 10 வயது சிறுமியை கனகராஜ் கடையில் வைத்துபாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த சிறுமி, வீட்டிற்கு சென்று நடந்தவற்றை, அவர் பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனடியாக, அவர்கள் சம்பவத்தை குறித்துஇராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் 70 வயதான மளிகை கடை உரிமையாளரை, போலீசார் விசாரணை மேற்கொண்டு,கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டம், கொலை மிரட்டல், மனித உயிருக்கு ஊறு விளைவித்தல் உட்பட 5பிரிவுகளின் கீழ், இராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...