முழு ஊரடங்கால் ஞாயிற்றுக்கிழமைகளில் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோருக்கு, பொள்ளாச்சி மின்னல் அரிமா சங்கம் சார்பில் உணவு வழங்கப்பட்டது

கோவை: தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதால், பொள்ளாச்சி நகர்ப்பகுதிகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்கள், உணவு இன்றி தவித்து வந்தனர்.

கோவை: தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதால், பொள்ளாச்சி நகர்ப்பகுதிகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்கள், உணவு இன்றி தவித்து வந்தனர்.

இந்நிலையில், பொள்ளாச்சியில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு, முழு ஊரடங்கான இன்று மின்னல் அரிமா சங்கம் சார்பில், உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது.

பொள்ளாச்சி மின்னல் அரிமா சங்கத்தின் தலைவர் சீனிவாசன், கோவை மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினர்.

இந்த ஊரடங்கு முடியும் வரை, பொள்ளாச்சி நகரப்பகுதியில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு ஊரடங்கு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் தொடர்ந்து வழங்கப்படும், என்று மின்னல் அரிமா சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...