கோவை: தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதால், பொள்ளாச்சி நகர்ப்பகுதிகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்கள், உணவு இன்றி தவித்து வந்தனர்.
கோவை: தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதால், பொள்ளாச்சி நகர்ப்பகுதிகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்கள், உணவு இன்றி தவித்து வந்தனர்.
இந்நிலையில், பொள்ளாச்சியில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு, முழு ஊரடங்கான இன்று மின்னல் அரிமா சங்கம் சார்பில், உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி மின்னல் அரிமா சங்கத்தின் தலைவர் சீனிவாசன், கோவை மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினர்.
இந்த ஊரடங்கு முடியும் வரை, பொள்ளாச்சி நகரப்பகுதியில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு ஊரடங்கு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் தொடர்ந்து வழங்கப்படும், என்று மின்னல் அரிமா சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பொள்ளாச்சியில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு, முழு ஊரடங்கான இன்று மின்னல் அரிமா சங்கம் சார்பில், உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி மின்னல் அரிமா சங்கத்தின் தலைவர் சீனிவாசன், கோவை மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினர்.
இந்த ஊரடங்கு முடியும் வரை, பொள்ளாச்சி நகரப்பகுதியில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு ஊரடங்கு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் தொடர்ந்து வழங்கப்படும், என்று மின்னல் அரிமா சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.