நீலகிரி: இ-பாஸ் இல்லாமல் கடலூர் கள்ளக்குறிச்சியில் இருந்து 5 மாவட்டங்களை கடந்து நீலகிரி மாவட்டத்திற்குள் வர முயன்ற மூவர் சோதனை சாவடியில் சிக்கினர்.
நீலகிரி: இ-பாஸ் இல்லாமல் கடலூர் கள்ளக்குறிச்சியில் இருந்து 5 மாவட்டங்களை கடந்து நீலகிரி மாவட்டத்திற்குள் வர முயன்ற போது சோதனை சாவடியில் சிக்கிய மூவர் தனிமைபடுத்தப்பட்டனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்குள் வருவதற்கு பர்லியார் மற்றும் குஞ்சப்பனை பகுதிகளில் இரண்டு சோதனை சாவடிகள் உள்ளது.
இந்த வழியாக உதகைக்கு வருபவர்களிடம் இ-பாஸ், தீவிர பரிசோதனைக்குப் பின் அவர்களின் மாதிரிகள் எடுத்த பின்பு வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுதான் மாவட்டத்திற்குள் அனைவரும் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், இரண்டு இருசக்கர வாகனத்தில் 3 பேர்கள் நீலகிரி குஞ்சப்பனை சோதனை சாவடி வழியாக நீலகிரி மாவட்டத்திற்குள் வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்களை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து விசாரித்தபோது அவர்களின் பெயர்கள் மகேந்திரன், மணிகண்டன், மற்றொரு மணிகண்டன் என தெரியவந்தது. இவர்கள் கடலூர் கள்ளக்குறிச்சியில் இருந்து இ-பாஸ் இல்லாமல் பல சோதனை சாவடிகளைக் கடந்து பல்வேறு குருக்கு வழியாக கிராமத்திற்குள் புகுந்து இ-பாஸ் இல்லாமல் வந்ததாக தெரிந்தது.
இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி என்பதால் மாற்று பாதை இல்லாத காரணத்தால் குஞ்சப்பனை சோதனை சாவடியில் சிக்கிக்கொண்டனர். இவர்கள் JCP இயந்திரத்தை இயக்குபவர்கள் என்றும் கோத்தகிரியில் நண்பனை பார்க்க வந்ததாகவும் கூறியதை தொடர்ந்து கோத்தகிரி போலீசார் அவர்களை தனிமைபடுத்தவும் கொரானா தொற்று பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்குள் வருவதற்கு பர்லியார் மற்றும் குஞ்சப்பனை பகுதிகளில் இரண்டு சோதனை சாவடிகள் உள்ளது.
இந்த வழியாக உதகைக்கு வருபவர்களிடம் இ-பாஸ், தீவிர பரிசோதனைக்குப் பின் அவர்களின் மாதிரிகள் எடுத்த பின்பு வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுதான் மாவட்டத்திற்குள் அனைவரும் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், இரண்டு இருசக்கர வாகனத்தில் 3 பேர்கள் நீலகிரி குஞ்சப்பனை சோதனை சாவடி வழியாக நீலகிரி மாவட்டத்திற்குள் வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்களை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து விசாரித்தபோது அவர்களின் பெயர்கள் மகேந்திரன், மணிகண்டன், மற்றொரு மணிகண்டன் என தெரியவந்தது. இவர்கள் கடலூர் கள்ளக்குறிச்சியில் இருந்து இ-பாஸ் இல்லாமல் பல சோதனை சாவடிகளைக் கடந்து பல்வேறு குருக்கு வழியாக கிராமத்திற்குள் புகுந்து இ-பாஸ் இல்லாமல் வந்ததாக தெரிந்தது.
இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி என்பதால் மாற்று பாதை இல்லாத காரணத்தால் குஞ்சப்பனை சோதனை சாவடியில் சிக்கிக்கொண்டனர். இவர்கள் JCP இயந்திரத்தை இயக்குபவர்கள் என்றும் கோத்தகிரியில் நண்பனை பார்க்க வந்ததாகவும் கூறியதை தொடர்ந்து கோத்தகிரி போலீசார் அவர்களை தனிமைபடுத்தவும் கொரானா தொற்று பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.