திருப்பூர்: தமிழகம் முழுவதும் இ-பாஸ் முறையினை ரத்து செய்ய வலியுறுத்தி, திருப்பூர் வட்டாசியர் அலுவலகத்தில் சிஐடியு மோட்டார் தொழிற்சங்கத்தினர் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: தமிழகம் முழுவதும் இ-பாஸ் முறையினை ரத்து செய்ய வலியுறுத்தி, திருப்பூர் வட்டாசியர் அலுவலகத்தில் சிஐடியு மோட்டார் தொழிற்சங்கத்தினர் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசால் அமல்படுத்தப்பட்ட இ-பாஸ் முறையால் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல கட்டாயம் பாஸ் பெற வேண்டும். இதனால், மக்கள் வெளியில் செல்வது பெரிதும் குறைந்துள்ளதால், டாக்சி, மேக்சி வேன், ஷேர் ஆட்டோ, டெம்ப்போ, தனியார் பஸ் ஆகியவற்றின் ஓட்டுநர்கள், வருமானம் இல்லாததால் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பிரச்னையில் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால், நடைமுறையில் உள்ள இ பாஸ் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஓட்டுநர்களுக்கு மாதம் ரூபாய் 7,500 உதவித் தொகையாக வழங்க வேண்டும் என, சிஐடியு மோட்டார் தொழிற்சங்கத்தினர் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழகம் முழுவதும் இ-பாஸ் முறை அமலில் உள்ளதால், மாவட்டத்திற்குள் மட்டுமே பயணிக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
வேறு மாவட்டத்திற்கு, வாடகை கார்கள் மற்றும் வேன்களில் சவாரிக்கு மக்கள் வந்தாலும், எங்களால் இ-பாஸ் இல்லாமல் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றோம், என்று தொழிற்சங்கத்தினர் வேதனை தெரிவித்தனர்.
ஆகவே, இந்த இ பாஸ் முறையினை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்து, வருமானமின்றி தவிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு ரூ.7500 இழப்பீடாக வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதனையடுத்து, திருப்பூர் வட்டாசியரிடம் அவர்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கினர்.

தமிழக அரசால் அமல்படுத்தப்பட்ட இ-பாஸ் முறையால் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல கட்டாயம் பாஸ் பெற வேண்டும். இதனால், மக்கள் வெளியில் செல்வது பெரிதும் குறைந்துள்ளதால், டாக்சி, மேக்சி வேன், ஷேர் ஆட்டோ, டெம்ப்போ, தனியார் பஸ் ஆகியவற்றின் ஓட்டுநர்கள், வருமானம் இல்லாததால் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பிரச்னையில் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால், நடைமுறையில் உள்ள இ பாஸ் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஓட்டுநர்களுக்கு மாதம் ரூபாய் 7,500 உதவித் தொகையாக வழங்க வேண்டும் என, சிஐடியு மோட்டார் தொழிற்சங்கத்தினர் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழகம் முழுவதும் இ-பாஸ் முறை அமலில் உள்ளதால், மாவட்டத்திற்குள் மட்டுமே பயணிக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
வேறு மாவட்டத்திற்கு, வாடகை கார்கள் மற்றும் வேன்களில் சவாரிக்கு மக்கள் வந்தாலும், எங்களால் இ-பாஸ் இல்லாமல் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றோம், என்று தொழிற்சங்கத்தினர் வேதனை தெரிவித்தனர்.
ஆகவே, இந்த இ பாஸ் முறையினை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்து, வருமானமின்றி தவிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு ரூ.7500 இழப்பீடாக வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதனையடுத்து, திருப்பூர் வட்டாசியரிடம் அவர்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கினர்.