பவானி சாகர் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் மூன்றாவது ஆண்டாக அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது!

கோவை: பவானி சாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 100 அடியை எட்டியுள்ளது.








கோவை: பவானி சாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 100 அடியை எட்டியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக பாவனி சாகர் அணை உள்ளது. அணையின் கொள்ளளவு 105 அடியாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி, அவலாஞ்சி, குந்தா, கோத்தகிரி, கூடலூர் போன்ற பகுதிகள் உள்ளன.

அதேபோல, பில்லூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் பவானி சாகர் அணைக்கு வரும். இங்கிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன் கோட்டை வாய்க்கால் மூலம் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் நிலங்கள் பாசன வசதிகள் பெறும்.

இந்த நிலையில், இன்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 101.50 அடியாக உள்ளது. நீர் இருப்பு 29.9 டிஎம்சியாக இருக்கிறது. நேற்றைய முன் தினம் வினாடிக்கு 6,667 கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது.

மேலும், நீர் பிடிப்பு பகுதிகளில் குறைந்து வரும் மலைப்பொழிவால் அணைக்கு நிர்வரத்து விநாடிக்கு 6,498 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன வசதிக்காக 1300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...